Pandian Stores 2 S2 701: படுக்கையுடன் வெளியேறிய கோமதி.! தனிமையில் தவிக்கும் மீனா.! பாண்டியன் ஸ்டோர்சில் என்னப்பா நடக்குது.?!

Published : Jan 28, 2026, 08:11 AM IST

Pandian Stores 2 S2 701: இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோடில், பாண்டியனின் கோபம் உச்சத்தை அடைகிறது. திருமண ரகசியம் வெளிப்பட்டதால், கோமதியை தங்க மயிலுடன் ஒப்பிட்டு, உறவை முறித்துக் கொள்வதாகக் கூறுகிறார்.

PREV
15
இன்று கோபமும், ஈகோவும் மோதிக் கொண்டது

இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோடு, குடும்ப உறவுகளில் இருக்கும் நுணுக்கமான உணர்ச்சிகளையும், சொல்லப்படாத வலிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. சமாதானம், பொறுமை, மன்னிப்பு என்று ஓடிய இந்த குடும்பத்தில், இன்று கோபமும், ஈகோவும் மோதிக் கொண்டது.

கோவிலில் தொடங்கும் இந்த எபிசோடில், கதிர் வழக்கம்போல் சமாதான தூதராக பாண்டியனை அணுகுகிறார். “வீட்டில் அமைதி இருக்கணும்” என்ற எண்ணத்தோடு அவர் பேசினாலும், பாண்டியனின் மனம் இந்த முறை முற்றிலும் வேறுபட்ட நிலையில் இருந்தது. “எத்தனை நாள் எத்தனை முறை சண்டை வந்தபோது நீதான் வந்து சமாதானம் செய்தாயா?” என்ற பாண்டியனின் கேள்வி, கதிரையே அமைதிக்குள் தள்ளுகிறது. வீட்டில் நிம்மதி கிடைக்காமல் கோவிலுக்கு வந்த தன்னை, இங்கேயும் வந்து தொந்தரவு செய்ய வேண்டாம் என பாண்டியன் கூறும் வார்த்தைகள், அவரது மன அழுத்தத்தை தெளிவாக வெளிப்படுத்துகின்றன. “இனிமேல் அம்மா பாவம், அப்பத்தா பாவம் என்று சொல்லி என்னிடம் வராதே” என்று கதிரிடம் பாண்டியன் சொல்லும் தருணம், உறவுகளுக்குள் விழுந்திருக்கும் விரிசலை காட்டுகிறது.

25
எல்லாத்துக்கும் பாவம் பார்க்கணும்

மறுபுறம், மீனாவும் அவரது கணவரும் இதே விவகாரத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாண்டியன் வீட்டிற்கு வந்த பிறகே தான் வீட்டிற்கு வருவேன் என்ற மீனாவின் பிடிவாதம், அவரின் கணவரை கடும் கோபத்திற்கு கொண்டு செல்கிறது. கோபத்தில் அவர் கோமதி வீட்டை விட்டு வெளியேறுவது, இந்த பிரச்சனை எவ்வளவு ஆழமாக சென்றிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இதனால் மீனாவுக்கும் அவரது கணவருக்கும் இடையிலான வாக்குவாதம் தீவிரமாகிறது.

இதற்கிடையில், தங்க மயில் செய்ததும், கோமதி செய்ததும் ஒன்றே என்ற பாண்டியனின் வார்த்தைகள், இன்னொரு பெரும் புயலை கிளப்புகின்றன. “பாவம் பார்த்தா எல்லாத்துக்கும் பாவம் பார்க்கணும்” என்று சொல்லிவிட்டு கோபமாக கோவிலை விட்டு வெளியேறுகிறார் பாண்டியன். 

35
“நான் எதுக்கு சொல்லணும்?”

திருமண விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டியது கோமதி, கதிர், ராஜி மட்டும்தான் என்றும் “நான் எதுக்கு சொல்லணும்?” என்றும் மீனா கேள்வி எழுப்புகிறார். அப்போது மீனாவின் கணவர், “தங்க மயிலுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டது, மீனாவின் கோபத்தை வெடிக்கச் செய்கிறது. “ஒரு நல்லது செஞ்சா பாராட்ட மனசு வராது… உங்களுக்கு உங்கப்பா மாதிரி ஈகோ அதிகம்” என்று மீனா திருப்பி பேச, அந்த வார்த்தைகள் அவரின் கணவரை மேலும் கொந்தளிக்கச் செய்கின்றன. “நான் உன்னிடம் பேசவே மாட்டேன்” என்று கூறி அவர் வெளியேறுவது, அவர்களுடைய உறவில் ஏற்பட்டுள்ள ஆழமான பிளவை காட்டுகிறது.

45
“தங்க மயிலும் நீயும் ஒன்னுதான்”

இதனைத் தொடர்ந்து பாண்டியனும் கதிரும் வீட்டிற்கு வருகிறார்கள். அங்கே, கோமதி பாண்டியனிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் பாண்டியனின் மனம் கரைந்துவிடவில்லை. “இனிமேல் நான் வீட்டில் இருக்கணும்னா, நீ என்னிடம் பேசக்கூடாது” என்று அவர் சொல்லும் வார்த்தைகள், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. “தங்க மயிலும் நீயும் ஒன்னுதான்” என்று கோமதியை பார்த்து பாண்டியன் கூறிய கோப வார்த்தைகள், வீட்டில் இருந்த அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்துகிறது. “நம்பிக்கை என்ற கண்ணாடி மொத்தமாக உடைந்துடுச்சு… இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று பாண்டியன் சொல்லும் தருணம், இந்த எபிசோடின் மிக வலிமையான காட்சியாக மாறுகிறது.

55
"மன்னிப்பும், சமாதானமும் எல்லா நேரமும் வேலை செய்யாது"

இந்த வார்த்தைகளின் வலியை தாங்க முடியாத கோமதி, பெட் ரூமில் படுக்காமல், பாய் மற்றும் தலையணையுடன் வெளியே வந்து படுத்துக்கொள்வது, அவரது மனநிலையை சொல்லாமலே சொல்லுகிறது. இறுதியாக, ராஜி மற்றும் கதிர் இடையிலான உரையாடல் சிறிய நிம்மதியை தருகிறது. “நான் செய்ததே தவறு” என்று ராஜி வருந்த, “நாம இப்போ நல்லாதானே இருக்கோம்… அதைப் பற்றி யோசிக்க வேண்டாம்” என்று கதிர் சொல்ல, ராஜிக்கு ஓரளவு நிம்மதி கிடைக்கிறது.

இன்றைய எபிசோடு, மன்னிப்பும், சமாதானமும் எல்லா நேரமும் வேலை செய்யாது; நம்பிக்கை உடைந்தால் உறவுகளே சிதறும் என்பதைக் காட்டியது. அடுத்த எபிசோடுகளில், இந்த உடைந்த உறவுகள் மீண்டும் இணைகிறதா? அல்லது இந்த இடைவெளி மேலும் பெரிதாகிறதா? என்பதே ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories