பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரின் 694-வது எபிசோடில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜி தனது தாய் வீட்டிற்குச் செல்வதும், அங்கு நடக்கும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும், மறுபுறம் சொத்துக்காகத் தீட்டப்படும் சதித்திட்டங்களும் கதையை விறுவிறுப்பாக்கியுள்ளன. இந்த எபிசோடின் முக்கிய நிகழ்வுகள் இதோ…
வெகுநாட்களுக்குப் பிறகு ராஜி தனது தந்தை வீட்டிற்குச் செல்கிறார். அவரைப் பார்த்ததும் அவரது அம்மா, சித்தி மற்றும் பாட்டி ஆகியோர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து, அன்போடு வரவேற்கிறார்கள். குறிப்பாக, வெயிலில் கூட அலையவிடாமல் வளர்த்த தங்கத்தைப் போய் போலீஸ் ஸ்டேஷன் வரை இழுத்துவிட்டார்களே என ராஜியின் அம்மா கண்கலங்குகிறார். அப்போது அங்கு வந்த ராஜியின் தந்தை மற்றும் சித்தப்பாவிடம், "உங்களைப் பார்க்க வேண்டும் போல் இருந்ததால் வந்தேன், நான் வந்தது பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடுங்கள், என்னை வெளியே துரத்திவிட மாட்டீர்களே?" என ராஜி உருக்கமாகக் கேட்கிறார். அதற்கு அவரது தந்தை "நல்லா இருக்கியா?" என்று நலம் விசாரித்தது ராஜியைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது.