ஊரைவிட்டே போயிரு... மர்ம நபர் கொடுத்த வார்னிங்கால் மிரண்டு போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Nov 11, 2025, 12:30 PM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் தீபாவளி கொண்டாடுவதற்காக முத்துவின் பாட்டி ஊருக்கு சென்ற மீனாவுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷின் பாட்டியையும், பெரியப்பாவையும் கோவிலில் வைத்து பார்த்த முத்து, அதைவீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல, அப்போது அம்மா செய்த கோல்மால் வேலையை அறிந்து ஷாக் ஆகிப் போகிறார். பின்னர் தன்னுடைய அம்மா லெட்சுமிக்கு போன் போட்டு திட்டும் ரோகிணி, இனி அவர்களோடு நீ பேசவே கூடாது என கண்டிஷன் போடுகிறார். இதையடுத்து, அப்பாவுக்கு திதி கொடுக்க ஊருக்கு மறக்காம வந்துரு என லெட்சுமி சொன்னதும், நான் வந்திடுறேன். நீ மறக்காம மகேஸ்வரியையும் கூட்டிட்டு வந்துரு என சொல்கிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

24
ஊருக்கு செல்லும் முத்து பேமிலி

தீபாவளி கொண்டாடுவதற்காக முத்து, மீனா, ரோகிணி, மனோஜ், ஸ்ருதி, ரவி, அண்ணாமலை, விஜயா ஆகியோர் ஊருக்கு சென்றடைந்ததும், முத்துவின் பாட்டி, அனைவரையும் பாசத்தோடு வரவேற்கிறார். பின்னர் அங்கு வரும் முத்துவின் நண்பர்கள், அவருக்கு சீம்பால் கொடுக்கிறார்கள். இதை அனைவருக்கும் கொடுக்கிறார் முத்து. அதை சாப்பிட்டு பார்த்த ஸ்ருதி செம டேஸ்டாக இருப்பதாக சொல்வதோடு, இந்த ஸ்வீட்டை நம்முடைய ரெஸ்டாரண்டிலும் வைத்தால் நல்லா சேல்ஸ் ஆகும் என சொல்ல, அதற்கு டெய்லி 100 மாடு குட்டி போடணும்மா என கிண்டலடிக்கிறார் முத்து.

34
கோவிலுக்கு செல்லும் மீனா

முத்துவின் பாட்டி ஊரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட செல்கிறார் மீனா, அப்போது அங்கு வரும் ஒரு சாமியாடி, ஏன் இங்க வந்த என மீனாவிடம் கேட்கிறார். சாமி கும்பிட வந்தேன் என சொன்ன மீனா, பயத்தில் முத்துவை கூப்பிடுகிறார். அதற்கு அந்த சாமியாடி, விதி சரியில்லாதப்போ அந்த ஆண்டவனே கூப்பிட்டாலும் கேட்காது என சொல்கிறார். அந்த சமயத்தில் முத்து வர, மீனா பயத்தில் தடுக்கி விழுகிறார். அதைப்பார்த்த அந்த சாமியாடி, வாழ்க்கையே தடுக்கி விழப்போகுது, இதுல கால் தடுக்கி விழுந்தா என்ன என சொல்லிக்கொண்டே கோவிலை விட்டு வெளியே கிளம்புகிறார்.

44
குழப்பத்தில் மீனா

அந்த நபரிடம் யாருப்பா நீ பார்க்கவே ஆள் ஒரு மார்கமா இருக்க என முத்து கேட்க, அதற்கு அந்த நபர் இங்க இருக்காத போயிடு, நீ போயிடு என சொல்லிக்கொண்டே வெளியே செல்கிறார். போகலேனா எல்லாம் விட்டுப் போயிடும் என அந்த நபர் சொன்னதைக் கேட்டு மீனா அதிர்ச்சி அடைகிறார். வீட்டிற்கு வந்தும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத மீனா, ஒரு ஓரமாக அமர்ந்திருக்க, அண்ணாமலையிடம் கோவிலில் நடந்த விஷயத்தை கூறுகிறார் முத்து. பின்னர் அண்ணாமலை அவரை எதுவும் நினைக்காத என ஆறுதல் கூறுகிறார். இதையடுத்து என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories