இந்நிலையில், முத்துவின் கையில் சிக்கியுள்ள வீடியோ மேலும் பிரச்சினையை பெரிதாக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஒருபுறம் முத்து, மீனா, ஸ்ருதி ஆகியோரிடம் மனோஜ் சிக்கக்கூடிய நிலை இருக்க, மறுபுறம் கனகா மற்றும் அவரது அம்மா தொடர்பான விஷயங்களிலும் அவர் சிக்கிக் கொள்ளும் சூழல் உருவாகிறது.
ரோகிணியை நம்பி அவர் செய்து வரும் செயல்கள் அனைத்தும் தற்போது அவருக்கே எதிராக திரும்பும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக முத்து எடுத்திருக்கும் வீடியோ வீட்டில் காட்டப்பட்டால், மனோஜ் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
ரோகிணியின் உண்மை வெளிவருமா? முத்துவின் வீடியோவால் மனோஜின் சீக்ரெட் உடையுமா? இந்த சிக்கலில் இருந்து மனோஜ் எப்படி தப்பிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.