வேலைக்கு சேர்ந்த முதல் நாளே கடையில் ஆட்டைய போட்ட மாமனார்; கொந்தளித்த மருமகன்; Pandian Stores 2 அப்டேட்

Published : Sep 26, 2025, 06:41 PM IST

Manickam Silent Theft : பாண்டியனின் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியனின் கடைக்கு வேலைக்கு வந்த சரவணன் மாமனார் மாணிக்கம் கடையில் கல்லாவில் பணத்தை ஆட்டைய போட்டுள்ளார்.

PREV
17
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடையில் கைவரிசை காட்டிய மாணிக்கம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணனின் மாமனார் பாண்டியனின் கடைக்கு வேலைக்கு வருவதாக கூறியிருந்தார். இது சரவணனுக்கு பிடிக்காத நிலையில் தங்கமயிலிடம் கூறினார். உன்னுடைய அப்பாவிடம் சொல்லி கடைக்கு வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிடு என்று கூறியிருந்தார். அதன்படி தனது அம்மாவிடம் சென்று இதைப் பற்றி பேச சென்றார். ஆனால், அங்கிருந்த சூழலைப் பார்த்து அவர் அதைப் பற்றி சொல்லவில்லை.

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் களமிறங்கும் 'ஹார்ட் பீட்' பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?

27
கோபத்தில் சரவணன் மற்றும் பழனிவேல்

அதற்கு பதிலாக உன்னுடைய அப்பாவிற்கு இப்போது தான் ஞானம் பிறந்திருக்கிறது. அவர் உன்னுடைய மாமனாரிடம் பேசி எப்படியோ வேலைக்கு வருவதாக கூறினார் என்றார். அவர் வேலைக்கு சென்றுவிட்டால் நான் கடனை அடைத்துவிடுவேன் என்றார். இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 596ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய காட்சியில் தங்கமயிலின் அப்பா மாணிக்கம் முதல் நாளாக கடைக்கு வேலைக்கு சென்றார்.

மாரி குறித்து கார்த்திக்கு தெரியவரும் தகவல்.. நடந்தது என்ன? - கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

37
கடையில் ஆட்டைய போட்ட மாணிக்கம்

வேலைக்கு சென்ற இடத்தில் தனது சம்பந்தி கடை என்ற உரிமையிலும், தான் இதுவரையில் எந்த வேலையும் செய்ததில்லை என்ற தெனாவட்டிலும் அவர் பாட்டுக்கு ஹாயா டூருக்கு வந்த மாதிரி அங்கிட்டும் இங்கிட்டும் சுற்றி வந்தார். கடையில் விற்பனைக்கு இருந்த கூல்டிரிங்ஸ் எடுத்து குடித்தார். பிறகு வயிறு பசிக்கிறது என்று வேர்க்கடலை எடுத்து சாப்பிட்டார். பழனிவேலுவிடம் சென்று டீ வாங்கி வரச் சொன்னார். பாண்டியன் உட்காரும் சேரில் உட்கார்ந்தார்.

கனவு நினைவானது... புது கார் வாங்கிய மகிழ்ச்சியில் சீரியல் ஹீரோ! குவியும் வாழ்த்து!

47
வயிறு பசிக்குது மாணிக்கம்

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தானாக சென்று பேசினார். உறவினர்களுக்கு தள்ளுபடி கொடுத்தார். இப்படி ஒரே நாளில் சரவணனுக்கும் சரி பழனிவேலுவிற்கும் சரி கோபத்தையும், வெறுப்பையும் உண்டாக்கினார். வேலைக்கு மாணிக்கம் வந்த நிலையில் பாண்டியன் கடையில் வேலை செய்தார். இதைப் பார்த்த சரவணன், அதான் வேலைக்கு ஆள் வைத்திருக்கிறீர்களே அப்பா, பிறகு ஏன் நீங்கள் வேலை பார்க்குறீர்கள் என்றார்.

57
பாண்டியன் சேரில் உட்கார்ந்த மாணிக்கம்

பாண்டியன் வெளியில் சென்ற போது தானும் வருவதாக கூறினார். கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தைப் பார்த்து இவ்வளவு பணமா ஆற்றுத்தண்ணீரை கொஞ்சமாக குடித்தால் என்ன தெரியவா போகிறது என்று ரூ.500 எடுத்து தனது பையில் போட்டுக் கொண்டார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

67
வரவு செலவு கணக்கு பார்க்கும் பாண்டியன்

ஆனால், பாண்டியன் வரவு செலவை எளிதி வைத்து வீட்டிற்கு சென்று தனது மகள் மற்றும் மகன்களிடம் சொல்லி அன்றைய நாளுக்கான கணக்கு பார்ப்பது வழக்கம். இந்த சூழலில் மாணிக்கம் கடையிலிருந்து ரூ.500 எடுத்த சூழலில் அதைப் பற்றி பாண்டியன் விசாரிக்க நேரிடும். அப்படி விசாரிக்கும் பட்சத்தில் புதிதாக வேலைக்கு வந்த மாணிக்கம் தான் என்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தெரிய வரும் போது என்ன நடக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது. ஆனால், அதற்கு ஒரு சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

77
கடையில் வேலைக்கு சேர்ந்த மாணிக்கம்

மாணிக்கம் கடையில் வேலை பார்ப்பது பற்றி சரவணன் தனது மனைவி தங்கமயிலிடம் பேசுவார். அதோடு பாண்டியனிடமும் பேசுவார் என்று தெரிகிறது. மேலும், அவர்களுக்கு இடையில் சண்டை வரலாம். இப்போது கடையில் உள்ள யாருக்கும் தெரியவில்லை. அப்படி தெரிய வரும் போது என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories