அடுத்த காட்சியாக பாண்டியனின் அக்கா, மீண்டும் வீட்டிற்கு வந்து சதீஷிற்கும், அரசிக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து பேசினார். இதைக் கேட்டு அரசி அதிர்ச்சி அடைந்த நிலையில் இதைப் பற்றி அரசி தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லி அரசியிடம் கேட்டார். பதிலுக்கு அரசி என்ன முடிவு எடுக்க போகிறார்?
சதீஷை திருமணம் செய்து கொள்ள அரசி சம்மதம் தெரிவிப்பாரா அல்லது மனம் திருந்திய குமரவேலுவை முறைப்படி திருமணம் செய்து கொண்டு அவரை கணவனாக ஏற்றுக் கொள்வாரா என்பது பற்றி இனி வரும் நாட்களில் நாம் பார்த்து தெரிந்து கொள்வோம். உண்மையில், அரசி மற்றும் குமரவேலுவிற்கு தான் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு புறம் இருந்தாலும், அரசி தற்கொலை செய்து கொள்வது போன்று ஒரு சில யூடியூப் சேனல்களில் புரோமோ காட்சிகள் வெளியாகி வருகிறது. இதன் மூலமாக இனி வரும் நாட்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் புதிய திருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.