Published : Feb 12, 2026, 11:59 PM ISTUpdated : Feb 13, 2026, 12:10 AM IST
Karthigai Deepam Serial Today Episode Highlights : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரகலா அபிராமியின் சிலை உள்ள இடத்தை சுத்தம் செய்துள்ளார்.
கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய 1121ஆவது எபிசோடில் கார்த்திக்கின் அம்மா சிலை இருக்கும் இடத்தை சுத்தம் செய்வதற்கு பயந்து எஸ்கேப் ஆக நினைத்த நிலையில் கார்த்திக்கிடம் மாட்டிக் கொண்டுள்ளார். என்ன நடந்தது என்று முழுவதுமாக பார்க்கலாம். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் கார்த்திக் மாமியார் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டுமென்றால் அவரது அம்மாவின் சிலை திறப்பு நிகழ்ச்சி நடக்க கூடாது என்று சந்திரகலா திட்டம் போட்டார்.
25
கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய எபிசோட்
இதற்காக அவரிடமும் பந்தயமும் செய்தார். மேலும், கார்த்திக் இந்த பந்தயத்தில் தோற்றால் வீட்டை விட்டு செல்வதாக சபதம் போட்டார். கார்த்திக்கின் அம்மா அபிராமி சிலை திறப்பு விழா நடக்காமல் இருக்க சந்திரகலா அவரது கணவருடன் இணைந்து பல திட்டங்களை போட்டார். இதில் ஒன்றில் கூட சந்திரகலாவால் ஜெயிக்க முடியவில்லை. முதலாவதாக கார்த்திக்கின் இந்த இடத்தை தங்களது பெயருக்கு எழுதி வாங்க திட்டம் தீட்டினார்.
35
Karthigai Deepam Serial Latest Promo
கார்த்திக் இந்த திட்டத்தை முறியடித்து பந்தயத்தில் ஜெயித்தார். 2ஆவதாக சிலை திறப்பு விழா நடக்காமலிருக்க சிலைக்கு வெடிகுண்டு வைத்தார். கையோடு கார்த்திக்கிற்கும் போன் போட்டு சிலைக்கு வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என்று சிவனாண்டி சந்திரகலாவிற்கு போன் போடுவதற்கு பதிலாக கார்த்திக்கிற்கு போன் போட்டு சொல்லியுள்ளார்.
45
Karthigai Deepam Serial Today Episode
இதைத் தொடர்ந்த் கார்த்திக் உடனே அந்த வெடிகுண்டு வெடிக்காமல் இருக்க எல்லா வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடித்து சிலை திறப்பு விழாவையும் சக்சஸ்புல்லாக நடத்தி முடித்து பந்தயத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் சொன்னபடி சந்திரகலாவை அம்மாவின் சிலை இருக்கும் இடத்தை சுத்தம் செய்ய வைத்தார். இதிலிருந்து தப்பிக்க சந்திரகலா வீட்டை விட்டு எஸ்கேப் ஆக நினைத்தார்.
55
Karthigai Deepam Serial
ஒரு பக்கம் சென்றால் அங்கு ரேவதி, ரோகிணி ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை எப்படியோ சமாளித்து பிறகு மீண்டும் மற்றொரு பக்கமாக வெளியேற நினைத்தால் அங்கு மயில்வாகனம் நின்று கொண்டிருந்தார். அவரை எப்படியோ சமாளித்து பின்னர் மெயின் வழியாக வெளியேற நினைத்தார். அந்தப் பக்கம் கார்த்திக் நின்று கொண்டிருந்தார். பிறகு என்ன செய்ய எஸ்கேப் ஆக வேறு வழியே இல்லாமல் சிலை உள்ள இடத்தை கூட்டி பெருக்கி சுத்தம் செய்ததோடு இல்லாமல் கோலமும் போட்டார். இதை வீடியோவாக பார்த்த ரோகிணி மற்றும் சுவாதி இருவரும் சந்தோஷத்தில் மூழ்கினர். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.