காளியம்மா போட்ட ஸ்கெட்ச்; புருஷனுக்காக ரிஸ்க் எடுத்த சந்திரகலா: சிசிடிவி ஆதாரத்தில் சிக்குவாரா?

Published : Dec 29, 2025, 10:25 PM IST

chandrakala cctv evidence kaliyamma plan: கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் தனது புருஷனுக்கு முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போவேன் என்று சந்திரகலா துணிந்துள்ளார்.

PREV
14
Karthigai Deepam Karthik and Chandrakala

கார்த்திகை தீபம் சீரியலில் தனது அக்காவையும், அவரது குடும்பத்தியும் பழி வாங்க வேண்டும் என்பதற்காக சந்திரகலா புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறார். கூடவே இருந்து குழி பறிப்பார்கள் என்பார்களே அது சந்திகலாவிற்கு பொருந்தும். தனது அக்கா வீட்டிலேயே இருந்து கொண்டு அவரது குடும்பத்தை பழி வாங்க வேண்டுமே என்பதற்காகத்தான். கோயில் திருவிழாவை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி வீட்டிலிருக்கும் அம்மன் நகையை அம்மனுக்கு சாற்றி சாமுண்டீஸ்வரிக்கு முதல் மரியாதை அளிக்க ஊர் பெரியோர்கள் முடிவு செய்துள்ளனர்.

24
Zee Tamil Karthigai Deepam Latest News

அதன்படி, வீட்டு பூஜையறையில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நகையை எடுத்து பார்த்தார்.அது பத்திரமாக இருந்தார். இதைத் தொடர்ந்து நகையை ஆட்டைய போட, காளியம்மாள், சிவனாண்டி, முத்துவேல் ஆகியோருடன் சேர்ந்து பிளான் போடுகிறார். ஆனாலும், கொஞ்சம் பீதி தான். ஏனென்றால் வீட்டில் சிசிடிவி கேமரா வேறு பொருத்தப்பட்டுள்ளது. அதுவும் இல்லாமல் இப்போது வீட்டில் டிரைவர் வேறு இருக்கான். 

34
Chandrakala vs Kaliyamma Twist

அதான் கொஞ்சம் பயமாக இருக்கு என்று சொல்லவே, உன்னுடைய புருஷனுக்கு முதல் மரியாதை கிடைக்க வேண்டுமா இல்லையா என்று காளியம்மாள் கேட்கவே என்னுடைய புருஷனுக்கு முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் எந்த ரிஸ்க்கும் எடுப்பேன் என்று சொல்லி வீட்டிலிருந்த சாமி நகையை புகைப்படம் எடுத்து தனது கணவர் செல்லுக்கு அனுப்பினார்.

44
Karthigai Deepam Serial Today Episode

இதைத் தொடர்ந்து சிவனாண்டி புதிதாக அம்மனுக்கு டூப்ளிகேட் நகையை செய்து, அதனை உண்மையான நகை மாதிரி காண்பித்து அம்மனுக்கு அணிய திட்டமிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில் கான்ஸ்டபிளின் மனைவியை தேடி கார்த்திக் அலைந்து கொண்டிருக்கிறார். அவர் வீட்டில் வேறு இல்லை. என்ன செய்ய போகிறார்? தனது அத்தையை காப்பாற்றுவாரா கார்த்திக்? அடுத்து என்ன நடக்கிறாது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories