கார்த்திக், அர்த்திகா நடித்த கார்த்திகை தீபம் சீரியலில் தீபா திரையை விலக்க வேண்டாம் என கார்த்தியை தடுத்து விட்ட நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பல்லவியாக திரைக்குள் இருந்து பாடும் தீபா, திரையை விலக்க வேண்டாம் என கார்த்தியை தடுத்து விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
24
Karthigai deepam serial update
அதாவது இளையராஜா பல்லவி பாடியதை பார்த்தியா என்று கேட்க, கார்த்திக் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல இதுக்கா இவ்வளவு செலவு பண்ண என்று கேள்வி கேட்கிறான். மேலும் பல்லவிக்காக போடப்பட்டிருந்த திரை செட்டப்பையும் காட்டுகிறான். அதன் பிறகு தீபா கார்த்திக்கு தெரியாமல் மீனாட்சி அழைத்துக் கொண்டு கிளம்ப, இங்கிருந்து தப்பித்த ரூபஸ்ரீ, கோகிலா ஐஸ்வர்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, பிரச்சனை வந்தா தான் நான் உங்களுக்கு கண்ணுக்கு தெரியுறனா என்ன கோபப்படுகிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
சரி ஏதாவது செய்யலாம் எனவும் வாக்கு கொடுக்கிறாள். அதன் பிறகு தீபா கார்த்திக்கிடம் பல்லவியை பாத்தீங்களா என்று கேட்க, அவள் இல்ல அவளுடைய பர்சனல் வாழ்க்கையில தலையிடுற மாதிரி இருந்தா அதை செய்யக்கூடாது. அப்படி செய்கிறது தப்பு என சொல்கிறான். ஒரே ஒரு திரை தானே விளக்கி இருக்கலாமே என்று கேட்க, இல்லை அப்படி செஞ்சிருந்தா அது தப்பாகி இருக்கும் எனவும் கூறுகிறான்.
44
Karthigai deepam today episode
அதன் பிறகு தீபா கார்த்திக்கு பால் கொண்டு வந்து கொடுக்க, பல்லவி கையில் இருந்த மருதாணியை பார்த்த கார்த்திக் தீபா கையில் இருக்கும் மருதாணியை பார்த்து விடுவானோ என்ற டென்ஷன் எகிறுகிறது. அதோடு நைட் எல்லாம் கார்த்தி தூங்காமல் இருக்க, அதை பார்த்து தீபா சோகம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.