கார்த்தியின் கையில் சிக்கிய தீபாவின் லெட்டர்.. கார்த்திகை தீபம் சீரியலில் காத்திருக்கும் செம்ம டுவிஸ்ட்

Published : Nov 14, 2023, 10:49 AM IST

கார்த்தி, அர்த்திகா நடிப்பில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
கார்த்தியின் கையில் சிக்கிய தீபாவின் லெட்டர்.. கார்த்திகை தீபம் சீரியலில் காத்திருக்கும் செம்ம டுவிஸ்ட்
Karthigai deepam

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. நேற்றைய எபிசோடில் தீபா காணாமல் போக கார்த்திக் எல்லா இடத்திலும் தேடி டென்ஷன் ஆன நிலையில் ரூமுக்கு செல்லும் போது அங்கு ஒரு லெட்டர் இருப்பதை பார்க்கிறான். 

24
Karthigai deepam serial

அந்த லெட்டரை எடுத்து படிக்கையில் தீபா தன்னுடைய மன நிம்மதிக்காக ஊர் எல்லையில் உள்ள கோவிலுக்கு வேண்டுதல் செய்வதற்காக செல்வதாகவும் தன்னை யாரும் தேட வேண்டாம் மீண்டும் நானே வந்து விடுவேன் என எழுதி இருக்கிறாள். மேலும் அந்த லெட்டரில் நான் கொண்டு வந்த சிலையை மண்ணுக்குள் புதைக்கும் அளவிற்கு என் மீது என்ன வன்மம்? ஏன் இப்படி செய்தார்கள் என எனக்கு புரியவில்லை என எழுதி இருப்பதை பார்த்த கார்த்தி, ஐஸ்வர்யா மீது மிகவும் கோபம் கொள்கிறான். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
zee tamil Karthigai deepam serial

உடனே ஐஸ்வர்யாவிடம் சென்று நீங்க ஏன் தீபாவுக்கு பிரச்சனை மேல பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்கீங்க. உங்கள மாதிரி அவளும் இந்த வீட்டுக்கு வாழ வந்த மருமக தானே என கேள்வி கேட்கிறான். நீங்களும் அவளைப் போல இந்த வீட்டுக்கு வாழ தானே வந்தீங்க என ஆவேசப்படுகிறான். ஐஸ்வர்யா நான் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்ல, நீங்கதான் கோவில் திருவிழாவில் தீபாவை கொலை செய்ய முயற்சி செய்தது என்பதும் எனக்குத் தெரியும் என உண்மையை போட்டு உடைக்க ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறார்.

44
Karthigai deepam today episode

ஐஸ்வர்யா சின்ன சின்ன தப்பு பண்ண கூடியதுதான் ஆனால் கொலை முயற்சி எல்லாம் செய்திருக்க மாட்டா என்று அருண் சப்போர்ட் பண்ணி பேசுகிறான். உடனே அங்கு வரும் அபிராமி இதில் யார் பக்கமும் நான் பேச முடியாது, அது மகன்களுக்குள் பிரச்சனையை உண்டு செய்யும். இது சாமி பிரச்சனை என்பதால் குறி கேட்கலாம் என முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... பழைய பாடலை பட்டி டிங்கரிங் பார்த்து பயன்படுத்தியதால் வெடித்த சர்ச்சை... சிக்கலில் ஏ.ஆர்.ரகுமான்

Read more Photos on
click me!

Recommended Stories