சூழ்ச்சி செய்யும் செளந்தரபாண்டி... ஷண்முகத்துக்கு ஷாக் கொடுக்கும் பரணி - அண்ணா சீரியல் அப்டேட்

Published : Nov 13, 2023, 03:04 PM IST

மிர்ச்சி செந்தில், நித்யா ராம் நடிப்பில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம்.

PREV
14
சூழ்ச்சி செய்யும் செளந்தரபாண்டி... ஷண்முகத்துக்கு ஷாக் கொடுக்கும் பரணி - அண்ணா சீரியல் அப்டேட்
Anna serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா, இந்த சீரியலில் முந்தைய எபிசோடில் பரணி கார்த்திக்கிடம் தனது தாலியை எடுத்து காட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, கார்த்திக் தனக்கு கல்யாணம் ஆன விஷயங்களை சொல்ல, பரணி அதை கேட்டு என்னால் கார்த்தியின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என சந்தோசப்படுகிறாள், அதனை தொடர்ந்து அவன் ஷண்முகம் குறித்து பேச வர அங்கு வரும் சௌந்தரபாண்டி கார்த்தியை பேச விடாமல் தடுத்து தரதரவென இழுத்து சென்று விடுகிறான். 

24
zee tamil Anna serial

இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி, தெரிந்தோ தெரியாமலோ என் மருமகன் பரணி கழுத்தில் தாலி கட்டிட்டான், இப்போ தான் அவங்களுக்கு இடையே அன்னோன்யம் உருவாகிறது, இந்த நேரத்தில் உன்னுடைய விஷயங்களை சொல்லி அதை கெடுத்து விட வேண்டாம்; பரணியுடன் உனக்கு எந்த தொடர்பும் இருக்க கூடாது என்று சொல்ல கார்த்தியும் உண்மை என நம்பி இனிமே ஷண்முகம், பரணியை தொடர்பு கொள்ளவே மாட்டேன் என்று கிளம்பி செல்கிறான். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Anna serial update

அடுத்ததாக வீட்டிற்கு வந்த பரணி, கார்த்தியை பார்த்த மகிழ்ச்சியில் இருக்க இனிமே ஷண்முகத்துடன் சந்தோசமாக இருப்பா என்று நினைக்க இன்னும் 95 நாள் தான், அதுக்கப்புறம் கிளம்பிட்டே இருப்பேன் என ஷாக் கொடுக்கிறாள். அவ எனக்கு பொண்டாட்டியா இருக்கனும்னு நான் ஆசைப்படல, 100 நாள் இந்த வீட்டில் சந்தோசமாக இருந்தால் போதும் என ஷண்முகம் சொல்கிறான். 

44
Anna serial today episode

மறுநாள் காலையில் ஷண்முகம் கேரளா செல்வதாக சொல்ல, வைகுண்டம் சூடாமணியை பார்க்க தான் போகிறான் என அவனை பின்தொடர்ந்து செல்ல முடிவெடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க. 

இதையும் படியுங்கள்... திடீரென காணாமல் போன தீபா; அதிர்ச்சியில் கார்த்திக்! - விறுவிறுப்பான கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய அப்டேட்

Read more Photos on
click me!

Recommended Stories