ஜெயிலில் கம்பி எண்ணும் சந்திரகலா! துரோகம் செய்தாலும் பாசத்திற்காக அழும் சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் உருக்கமான திருப்பம்!

Published : Mar 13, 2026, 06:54 PM IST

Karthigai Deepam Serial Today 1150th Episode in Tamil : கார்த்திகை தீபம் சீரியலில் சந்திரகலா கம்பி எண்ணுகிறார்! தங்கை செய்த துரோகத்தை விட, அவர் ஜெயிலுக்குச் சென்றதை எண்ணி சாமுண்டீஸ்வரி உணர்ச்சிவசப்பட்டு அழும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
16
கார்த்திகை தீபம் சீரியல்

Karthigai Deepam Serial Today 1150th Episode in Tamil : ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம் சீரியல். இந்த சீரியல் மூலமாக சேனலுக்கு டிஆர்பி ரேட்டிங் வருகிறது என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் சீரியலையும், நடிகர், நடிகைகளையும் கொண்டாடி வருகின்றனர். ஆரம்பத்தில் கார்த்திக் டிரைவராக வேலை பார்த்த போது சீரியலுக்கு எதிராகவும், கார்த்திக் பாவம், அவரை விட்டுவிடுங்கள் என்றும் குரல் கொடுத்தனர். ஆனால், இப்போது சீரியலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். 

26
Karthigai Deepam Serial Chandrakala arrested

கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1150ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது தொடர்பான புரோமோ வீடியோவை ஜீ தமிழ் வெளியிட்டது. அதன்படி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

36
1. ஆதாரத்துடன் சிக்கிய சந்திரகலா - அதிரடி கைது!

கார்த்திக் திரட்டிய அசைக்க முடியாத ஆதாரங்களால் சந்திரகலாவின் பொய் முகம் அம்பலமானது. கோயில் நகை திருட்டு மற்றும் குடும்பத்திற்கு எதிராகச் செய்த சதிகளுக்காகச் சட்டத்தின் பிடியில் சந்திரகலா சிக்கியுள்ளார். காவல்துறையினர் சந்திரகலாவைக் கைது செய்து அழைத்துச் சென்ற காட்சிகள் ரசிகர்களுக்குப் பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது.

46
2 சந்திரகலாவை சந்தித்த கார்த்திக்:

சந்திரகலாவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் அவர் மீது கார்த்திக் புகார் எழுதி கொடுத்தார். அதன் பிறகு அவரிடம் சென்று பேசிய கார்த்திக் அவருக்கு அறிவுரை கூறினார். செய்த குற்றத்திற்காக ஜெயிலில் கம்பி எண்ணுகிறோம் என்ற நினைப்பு கூட இல்லாத சந்திரகலா கார்த்திக்கை எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என்ற வெறியோடு அவரிடம் பேசினார்.

56
3. தங்கையை நினைத்து உருகும் சாமுண்டீஸ்வரி!

சந்திரகலா இவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்வார் என்று சாமுண்டீஸ்வரி கனவிலும் நினைக்கவில்லை. சந்திரகலா செய்த தவறுகள் ஒருபுறம் இருந்தாலும், உடன் பிறந்த தங்கை ஜெயிலுக்குச் சென்றதை எண்ணி சாமுண்டீஸ்வரி கண்ணீர் விட்டுப் புலம்புகிறார். "உனக்கு என்ன குறை வைத்தேன்?" என்று அவர் கேட்கும் காட்சிகள் ரசிகர்களைக் கண்கலங்க வைத்துள்ளது.

ஃபர்ஸ்ட் போஸ்டர்லயே 3 பொண்ணுங்க! கென் கருணாஸை கலாய்த்த தனுஷ்! சிரிப்பலையில் ரசிகர்கள்!

66
4. கார்த்திக்கின் ஆறுதல் - இனி அடுத்து என்ன?

சாமுண்டீஸ்வரி உடைந்து போயிருப்பதைப் பார்த்து கார்த்திக் அவருக்கு ஆறுதல் கூறுகிறார். தப்பு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதில் கார்த்திக் உறுதியாக இருக்கிறார். அதே சமயம், சந்திரகலா ஜெயிலில் இருந்துகொண்டே தனது அடுத்தகட்ட பழிவாங்கும் படலத்தைத் தொடங்குவாரா? என்ற அச்சமும் நிலவுகிறது.

என் உயிருக்கு உயிரான ராஹா! - மகன் பற்றி முதல்முறை மனம் திறந்த ஜாய் கிரிசில்டா! நெகிழ வைக்கும் உருக்கமான பதிவு!

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories