அதுமட்டுமின்றி இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான ஆதி குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, சக்தி கைக்கு கிடைத்துள்ளது. அவரும் அந்த வீடியோவை கோர்ட்டில் ஒப்படைத்து உள்ளார். இதனால் அந்த வீடியோ இந்த வழக்கு விசாரணையின் போது கேம் சேஞ்சராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இராவணன் கடைசி நேரத்தில் ஏதேனும் ட்விஸ்ட் கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
அதன் ஒரு பகுதியாக வெளியே காரில் சென்றிருந்த ஆதி குணசேகரனை, தீர்த்துக் கட்ட திட்டமிட்டிருக்கிறார் இராவணன். அவர் கார் டிரைவரிடம் சொல்லி, ஆதி குணசேகரனை காரின் உள்ளே வைத்து அடைக்க சொல்ல, அவரும் அவ்வாறே செய்துவிட்டு எஸ்கேப் ஆகிறார். பின்னர் காருக்குள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிப் போகிறார் ஆதி குணசேகரன். இந்த பழியும் ஜனனி மீது விழ வாய்ப்பு உள்ளது. அதை ஜனனி எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும்.