சின்னத்திரையில் தற்போது டிஆர்பியில் கலக்கி வரும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்களை வெகுவாக கவர முக்கிய காரணம் அதன் விறுவிறுப்பான கதைக்களமும், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் தான். இந்த சீரியலின் ஹைலைட்டான கேரக்டர் என்றால் அது ஆதி குணசேகரனாக நடிக்கும் மாரிமுத்துவின் கேரக்டர் தான். அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் மீம் டெம்பிளேட்டுகளாக மாறும் அளவுக்கு பேமஸ் ஆகிவிடுகின்றன.