உயில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த நிலா... சோழன் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்

Published : Feb 17, 2026, 09:36 AM IST

அய்யனார் துணை சீரியலில் உயில் வீட்டில் தான் இருக்கிறது என்கிற விஷயம் சோழன் மற்றும் நிலாவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
14
Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் வீட்டின் உயில் தன் பெயரில் இருப்பதாக நடேசன் சொன்னதை அடுத்து, அந்த உயில் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க தன்னுடைய பெரியப்பாவையே கடத்த முடிவெடுக்கிறார் சோழன். நிலா கொடுத்த ஐடியாவின் படி, பல்லவன் மற்றும் பாண்டியனை வைத்து பெரியப்பாவை கடத்தி சொத்து பத்திரம் பற்றி கேட்கையில், அது நடேசன் வீட்டில் தான் இருக்கிறது என்கிற உண்மையை அவர் உலறிவிடுகிறார். இதையடுத்து சோழனும், நிலாவும் அவரை காப்பாற்றுவது போல் நடிக்கிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இங்கே பார்க்கலாம்ம்.

24
உயிலை எடுக்க கிளம்பும் சோழன் - நிலா

உயில் வீட்டில் தான் இருக்கிறது என்பது தெரிந்ததும், அந்த உயிலை எப்படி கண்டுபிடிச்சு எடுப்பது என்பதைப் பற்றி நிலாவும், சோழனும் யோசிக்கிறார்கள். சீல் வைத்திருக்கும் வீட்டில் தான் உயில் இருக்கும், அதைப் போய் எடுப்போம் என இருவரும் கிளம்பி வீட்டுக்கு செல்கிறார்கள். வெளியே கேட்டை பூட்டி வைத்திருக்கிறார்கள். அதன்பின்னர் அந்த கேட்டின் மீது ஏறி இருவரும் உள்ளே குதிக்கிறார்கள். வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு இருப்பதால், வேறு வழியாக தான் உள்ளே செல்ல முடியும். அதனால் மேலிருந்து உள்ளே செல்ல முடிவெடுக்கிறார் சோழன்.

34
வீட்டுக்குள் குதிக்கும் சோழன்

மேலே ஏறுவதற்காக அங்கிருந்த ஏணி ஒன்றையும், கயிறையும் எடுத்துக் கொண்டு மேலே ஏறுகிறார் சோழன். அதன் பின்னர் நிலாவும் மேலே ஏறுகிறார். பின்னர் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்குகிறார் சோழன். நிலா, மேலேயே இருந்து யாரும் வருகிறார்களா என்பதை பார்த்துக் கொள்கிறார். சோழன் வீட்டுக்குள் இருக்கும் உயிலை வலைவீசி தேடுகிறார். அந்த உயில் மட்டும் கிடைக்கவில்லை, மற்ற பொருட்கள் என்னென்னவோ கிடைக்கின்றன. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார் சோழன்.

44
பெரியப்பாவால் வரும் சிக்கல்

இவர்கள் வீட்டில் பத்திரத்தை தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சோழனின் பெரியப்பா அங்கு ரவுண்ட்ஸ் வருகிறார். இதனால் நிலா பதறிப்போகிறார். வீட்டுக்குள் இருக்கும் சோழனும் ஷாக் ஆகிறார். இதையடுத்து என்ன ஆனது? சோழனின் பெரியப்பா, சோழன் உள்ளே இருப்பதை கண்டுபிடித்தாரா? பெரியப்பாவுக்கு தெரியாமல் சோழன் உயிலை கண்டுபிடித்தாரா? வீட்டின் மேற்கூரையில் இருக்கும் நிலா என்ன ஆனார்? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் தான் விடை கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories