சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்கு விஜயா பெண் பார்த்துள்ள விஷயத்தை ரோகிணியிடம் போட்டுடைத்துள்ளார் சிந்தாமணி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், சிந்தாமணி, நேராக சென்று ரோகிணியிடம் விஜயா மனோஜுக்காக பெண் பார்த்துள்ள விஷயத்தை கூறுகிறார். அதைக்கேட்டதும் ரோகிணி செம டென்ஷன் ஆகிறார். இப்போவே போயி நான் ரெண்டுல ஒன்னு பார்த்துவிடுகிறேன் என சொல்கிறார் ரோகிணி, அப்போது அவரை தடுக்கும் சிந்தாமணி, கொஞ்சம் பொறுமையா இரு, உங்க அத்தை, மனோஜுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது என்கிற உண்மையை இன்னும் பொண்ணு வீட்டுல சொல்லவே இல்ல. அவங்க அதை சொன்னதுக்கு அப்புறமும், அவங்க கல்யாணத்துக்கு ஓகே சொன்னாங்கனா அதுக்கப்புறம் போய் பிரச்சனை பண்ணு என கூறுகிறார்.
25
குட் நியூஸ் சொன்ன முத்து
மறுபுறம் அண்ணாமலை வீட்டில் தனியாக இருக்கும் போது, முத்து, அப்பா... அப்பானு சொல்லிகிட்டே சந்தோஷமாக வீட்டுக்குள் வருகிறார். அதேநேரத்தில் விஜயாவும் என்னங்க... என்னங்க என அவரிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல ஓடி வருகிறார். பின்னர் அண்ணாமலை இருவரையும் உட்கார வைத்து விஷயத்தை கேட்கிறார். முதலில் முத்து, தான் புதிதாக வேன் வாங்க உள்ள விஷயத்தை சொல்கிறார். இந்த வேன் வாங்கினால் அபார்ட்மெண்டில் உள்ள ஆர்டர் எல்லாம் எனக்கு தான் கிடைக்கும், நிறைய சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார். இதைக்கேட்ட அண்ணாமலை சந்தோஷப்படுகிறார்.
35
மனோஜுக்கு பொண்ணு பார்த்த விஷயத்தை சொல்லும் விஜயா
இதையடுத்து பேசும் விஜயா, தான் சொல்ல வந்த விஷயத்தை கூறுகிறார். தான் மனோஜுக்கு பொண்ணு பார்த்திருப்பதாகவும், அது பணக்கார பெண் என்றும் கூறுகிறார். அம்மா சொன்னதைக் கேட்டதுமே மனோஜ் வலிய ஆரம்பிக்கிறார். எப்போ பொண்ணு பார்க்க போறோம் என நோண்டி நோண்டி கேட்கிறார் மனோஜ். அப்போது அண்ணாமலை, விஜயாவிடம், நீ மனோஜுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லிட்டியா என கேட்கிறார். இன்னும் சொல்லல என விஜயா சொன்னதும், இதை எப்படி நீ சொல்லாம இருந்த என அண்ணாமலை கேட்டதும், முதலில் அவர்கள் மனோஜை பார்க்கட்டும், அவங்களுக்கு கண்டிப்பா பிடிச்சிரும். அதுக்கப்புறம் உண்மையை சொல்றேன் என கூறுகிறார்.
பெண் வீட்டார் நம் வீட்டுக்கு வரும் போது நானும் ரவியும் வீட்டில் இருக்க மாட்டோம் என முத்து சொல்கிறார். ஏன் என விஜயா கேட்க, அவங்களிடம் நாங்களே உண்மையை உலறிவிடுவோம். அதனால் நீங்களே பார்த்துக்கோங்க என சொல்கிறார். இதையடுத்து அங்கிருந்து கிளம்பி மீனாவின் அம்மா வீட்டுக்கு செல்கிறார் முத்து. அங்கு சத்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. சத்யாவின் அம்மா அதற்காக வீட்டில் சுட சுட கேசரி கிண்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு சிந்தாமணியின் மகள் ரேகா, கேக் மற்றும் டிரெஸ்ஸோடு அங்கு வருகின்றார்.
55
சத்யாவின் காதலுக்கு கிடைத்த கிரீன் சிக்னல்
அவர் வாங்கி வந்த டிரெஸ் ஒவ்வொன்றும், 5 ஆயிரம், 6 ஆயிரம் மதிப்பில் இருக்கிறது. அதன்பின்னர் கேக்கை வெட்டி, சத்யா ரேகாவுக்கு ஊட்ட, ரேகா சத்யாவுக்கு ஊட்ட என இருவரும் மாறி மாறி ஊட்டிக்கொள்கிறார்கள். அதன்பின்னர் கிளம்பும் முன், சத்யாவிடம் பேசும் ரேகா, நீ இன்னும் பதில் சொல்லவே இல்ல, உன்னுடைய பதிலை இன்னைக்கு நான் எதிர்பார்க்கிறேன் என சொல்லிவிட்டு செல்கிறார். இதைக்கேட்ட முத்து மற்றும் மீனா, சத்யாவிடம் என்னடா லவ் பண்றியா என கேட்க, அவரும் ஆமாம் என சொல்லிவிடுகிறார். முத்து சத்யாவின் காதலுக்கு ஓகே சொல்லிவிடுகிறார். ஆனால் அவர் பெரிய இடத்துப் பெண் என்பதால் மீனாவுக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது. இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.