ஊரை விட்டு கிளம்ப முடிவு செய்த விஜி ; அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நிலா: செல்லமே செல்லமே பரபரப்பு காட்சி

Published : Feb 14, 2026, 05:52 PM IST

Chellame Chellame Serial Today Episode Feb 14 Promo: செல்லமே செல்லமே சீரியலில் விஜி ஊரை விட்டு போக முடிவு செய்கிறார். ஊரை விட்டுப் போக மனம் இல்லாமல் தடுக்கும் நிலா மயங்கி விழ அடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். 

PREV
14
செய்யமே செல்லமே சீரியில் இன்றைய புரோமோ

செல்லமே செல்லமே சீரியலில் விஜி ஊரை விட்டு போக முடிவு செய்கிறார். அம்மா அண்ணன் அண்ணி அனைவரையும் விட்டுவிட்டு நிலாவுடன் ஊரை விட்டுப் போக தயாராகும் விஜி . ஊரை விட்டுப் போக மனம் இல்லாமல் தடுக்கும் நிலா. அதிர்ச்சியில் மயங்கி விழுந்த நிலா ஹாஸ்பிடலுக்கு போகும் பரபரப்பு காட்சியுடன் இன்றைய எபிசோட் ஒளிபரப்பாகிறது இதன் முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
செல்லமே செல்லமே சீரியல்

செல்லமே செல்லமே சீரியல் சன் டிவியில் இரவு 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. விக்ரமை கண்ட விஜி இந்த ஊரில் இருந்தால் விக்ரமின் பிரச்சினை ஏற்படும் அதனால் நிலவும் பாதிக்கப்படுவாள் என்று முடிவெடுத்து இந்த ஊரை விட்டு போக முடிவெடுக்கிறார் . வீட்டிற்கு வந்து தன் அம்மா மற்றும் பிரியாவிடம் சொல்லி ஊரை விட்டு கிளம்ப பேக்கில் உடைகளை எடுத்து வைத்துவிட்டு விரும்புகிறார். அப்பொழுது அம்மா மற்றும் பிரியா இருவரும் எதுக்கு ஊருக்கு போற என்ன ஆச்சு என்று கேட்க எனக்கு இந்த ஊரு பிடிக்கல அதனாலதான் நான் இங்கிருந்து போறேன் இங்க இருந்தா நம்மளை நாம் நிம்மதியாக இருக்க விட மாட்டாங்க என்று பல காரணங்களை சொல்கிறார். 

34
ஊருக்கு புறப்படும் விஜி

அம்மாவும் பிரியாவும் போக வேண்டாம் இங்கே இரு என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றனர் நிலாவும் நான் அங்கு வரமாட்டேன் எனக்கு இங்க இருக்கிற தான் புடிச்சிருக்கு எனக்கு இந்த ஊரு தான் புடிச்சிருக்கு ஸ்கூல் ரொம்ப புடிச்சிருக்கு நான் இதெல்லாம் மிஸ் பண்ணுவேன் என்றெல்லாம் அம்மாவிடம் சொல்லி அழுகிறார். 

44
மருத்துவனையில் நிலா

வரமாட்டேன் வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறார் இங்கு இருந்தா நம்மள நிம்மதியாக வாழ விட மாட்டாங்க நிலா வா போய்விடுவோம் என்று விஜி கையை பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கிறார் திடீரென்று நிலா மயங்கி கீழே விழுகிறார் விழுந்ததும் விஜி அழுது கொண்டே நிலா நிலா என்ன ஆச்சு என்று கேட்டுக்கொண்டே ஹாஸ்பிடலுக்கு ஒரு ஆம்புலன்ஸ் மூலம் அவை தூக்கி செல்கின்றனர். இந்த ப்ரோமோ முடிவு அடைந்தது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories