Anbu saved Anandhi in Singapenne Serial : சிங்கப்பெண்ணே சீரியலில் இன்றைய எபிசோடில் ஆனந்தியை காப்பாற்றுகிறார் அன்பு யார் உன்னை கடத்தினார் என்று கேட்க அரவிந்த் தான் என்று கைகாட்டிய ஆனந்தி என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சன் டிவியில் 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் தற்போது பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. ஆனந்தியை பழைய வஞ்சகத்தை தீர்க்க திருமூர்த்தி மற்றும் அவரது தம்பி அரவிந்த் இருவரும் கடத்தினர். ஆனந்தியை அடிக்காமலும் துன்புறுத்தாமலும் கரண்டின் மூலம் எரித்துக் கொள்ள திட்டமிடுகின்றனர். அப்பொழுது அரவிந்த் அண்ணா யாரையாவது வாயும் வயிருமா இருக்குற பொண்ண அடிப்பாங்களா அது பாவம் இல்லையா என்று சொல்ல ஒரே ஒரு சுச்சியை மட்டும் போடு அண்ணா அவ எரிஞ்சுருவா என்று திட்டமிடுகின்றனர்.
நல்லவேளை ஞாபகப்படுத்துன டா தம்பி இப்பவே போடுற என்று திருமூர்த்தி வந்து சேரில் அமருகிறார். அவர் சுச்சியை போடும் பொழுது வேண்டா திரு மூர்த்தி எனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா அன்பு உடைய சும்மா விட மாட்டார் என்று ஆனந்தி சொல்கிறாள். நீ ஆனந்தி இல்ல ஆனந்தீ எப்படி எறும்பு சாம்பலாகரன்னு மட்டும் பாரு என்று சொன்னபடியே திருமூர்த்தி சுச்சியை போடுகிறார். அப்போது ஆனந்தி கருப்பா என்று சொல்கிறார் அந்த நேரத்தில் கரண்ட் ஆஃப் ஆகிறது. அந்த கரண்ட் போய் ஆன் பண்றா என்று திருமூர்த்தி கத்த அங்கிருந்து அன்பு ஒருவரை அடித்து உள்ளே என்ட்ரி கொடுக்கிறார்.
33
சிங்கப்பெண்ணை சீரியல் இன்றைய எபிசோடு
நான் சொன்ன இல்லடா அன்பு எப்படி இங்க வருவாருன்னு எங்கடா உன் தம்பி என்று ஆனந்தி கேட்க அங்கிருந்து தப்பித்து விடுகிறார் அரவிந்த் அதன் பிறகு அங்கு இருக்கும் அனைவரையும் அடித்து விட்டு ஆனந்தியை காப்பாற்றி வருகிறார். அரவிந்த் அந்த இடத்திலிருந்து தப்பித்து விடுகிறார். அங்கிருந்து ஆனந்தியை காப்பாற்றி வந்து மகேஷ் வீட்டிற்கு அழைத்து வருகிறார் அன்பு. யார் உன்னை கடத்துனது என்று மகேஷ் மற்றும் அன்பு கேட்க யோசித்துக் கொண்டே இருக்கிறார் இப்பொழுது ஏதாவது குரலை ஞாபகப்படுத்தி பாருங்கள் என்று சொல்ல அரவிந்த் சார் வாய்ஸ் தான் நாங்கள் கேட்டுச்சு என்று அரவிந்தை கை காட்டுகிறார் தொடர்ந்து எபிசோடு முடிவடைகிறது.