Karthigai Deepam : ராஜராஜனை ஹவுஸ் அரெஸ்ட் செய்யும் சாமுண்டீஸ்வரி... சைடு கேப்பில் சதிவேலை பார்த்த சந்திரகலா

Published : Sep 02, 2026, 09:41 AM IST

Karthigai Deepam Serial Twist : கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரி வீட்டில் இருந்து ராஜராஜன் வெளியேற நினைக்க அவரை வெளியே விடாமல் பிடித்து வைத்திருக்கிறார்கள். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

PREV
14
ராஜராஜனை தடுக்கும் சாமுண்டீஸ்வரி

தமிழ் சின்னத்திரையில் கார்த்திகை தீபம் தொடர் ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரில் தற்போது ராஜராஜனை சுற்றி அடுத்தடுத்து பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நேற்றைய எபிசோடில், கருப்பசாமிக்கு விளக்கு போடுவதற்காக ராஜராஜன் கோவிலுக்குச் செல்ல வேண்டிய சூழல் உருவானது. ஆனால் அவர் கோவிலுக்குச் செல்வதைத் தடுக்க சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலா முயற்சி செய்வதால், இன்றைய எபிசோடில் எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேற உள்ளன.

ராஜராஜன் கோவிலுக்குச் செல்லப்போகிறார் என்ற விஷயம் சந்திரகலாவுக்குத் தெரியவருகிறது. இதையடுத்து அவர் சாமுண்டீஸ்வரியை தூண்டிவிடுகிறார். சந்திரகலாவின் பேச்சைக் கேட்டு சாமுண்டீஸ்வரி, ராஜராஜன் கோவிலுக்குச் செல்லக் கூடாது என்று திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று குழம்பும் ராஜராஜன், கார்த்திக்கிடம் இந்த விஷயத்தை தெரிவிக்கிறார். இதையடுத்து கார்த்திக் குடும்பத்தினருடன் ஆலோசித்து ஒரு திட்டத்தை வகுக்கிறார்.

karthigai Deepam : கார்த்திக்கின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட சாமுண்டீஸ்வரி.. ராஜராஜன் விஷயத்தில் எடுத்த அதிரடி முடிவு!

24
ராஜராஜன் போடும் டிராமா

தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும் ராஜராஜன் கூறுகிறார். ஆனால் சாமுண்டீஸ்வரி அவரது பேச்சை நம்பாமல், மருத்துவரை வீட்டிற்கே வரவழைத்து பரிசோதனை செய்ய முடிவு செய்கிறார். வீட்டிற்கு வரும் மருத்துவர் ராஜராஜனை பரிசோதித்த பிறகு, அவருக்கு எந்தவிதமான பெரிய உடல்நலப் பிரச்சனையும் இல்லை என்பதை தெரிந்து கொள்கிறார். இருந்தாலும் மயில்வாகனம் மற்றும் ரோகினி மருத்துவரிடம் பேசி, ராஜராஜனுக்கு சில நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாகக் கூற வைக்கின்றனர்.

34
சந்திரகலாவின் சூழ்ச்சி

ஆனால் இந்த விஷயங்களால் சந்திரகலாவின் சந்தேகம் மட்டும் தீரவில்லை. ராஜராஜன் எப்படியாவது வீட்டை விட்டு வெளியே சென்றுவிடுவார் என்று நினைக்கும் அவர், அடுத்ததாக அதிர்ச்சிகரமான காரியத்தில் இறங்குகிறார். ராஜராஜன் குடிக்க வைத்திருக்கும் பாலில் தூக்க மாத்திரையை கலக்கிறார் சந்திரகலா. இதன் மூலம் அவர் தூங்கிவிட்டால் கோவிலுக்குச் செல்ல முடியாது என்பது அவரது திட்டமாக இருக்கிறது. ஆனால் சந்திரகலாவின் இந்த முயற்சியையும் மயில்வாகனம் முறியடிக்கிறார். அவரை தந்திரமாக திசைதிருப்பி, ராஜராஜன் அந்தப் பாலை குடித்துவிட்டதாக நம்ப வைக்கிறார்.

44
அடுத்த ட்விஸ்ட் என்ன?

இதை நம்பிய சந்திரகலா அங்கிருந்து செல்கிறார். இப்போது அனைவரின் கவனமும் கார்த்திக்கின் அடுத்த நகர்வின் மீது திரும்பியுள்ளது. ராஜராஜனை கோவிலுக்கு அழைத்துச் செல்ல அவர் போட்ட திட்டம் நிறைவேறுமா? சாமுண்டீஸ்வரியின் எதிர்ப்பை மீறி ராஜராஜன் கோவிலுக்குச் செல்வாரா? சந்திரகலாவின் அடுத்த சதி என்ன? என அடுத்தடுத்து பல கேள்விகளை எழுப்பும் வகையில் இன்றைய எபிசோட் பரபரப்பாக நகர உள்ளது. இந்த திருப்பங்களின் முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள கார்த்திகை தீபம் தொடரை இன்று இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories