இந்த நிலையில், நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன், ஓரிரு தினங்களுக்கு முன்பு வனத்துறையிடம் அனுமதி பெறாமல், தடையை மீறி மலை உச்சி வரை சென்று வந்திருக்கிறார். அவர் மலை ஏறியது குறித்து வீடியோ ஒன்றையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மலைமீது ஏறி இறங்கியது மிகவும் கடினமாக இருந்ததாகவும், இருள் சூழ்ந்துவிட்டதால் தான் அச்சமடைந்ததாகவும், டிரெக்கிங் செல்வதாக இருந்தால் காலையிலேயே ஏறி, மாலைக்குள் இறங்க திட்டமிட்டுக்கொள்ளுங்கள் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
அர்ச்சனாவின் இந்த பதிவு வைரலான நிலையில், அதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி, அனுமதியின்றி மலையேறிய குற்றத்திற்காக அர்ச்சனாவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து இருக்கிறது.