இதையடுத்து விருதுநகர் மாவட்டம் சேத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்கிற ஜோதிடர், அண்மையில் மாரிமுத்துவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். விளக்கம் அளிக்கவில்லை என்றால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இது ஒருபுறம் இருக்க, தற்போது நடிகர் மாரிமுத்து மீது திருச்செங்கோடு காவல்நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் புகார் அளித்துள்ளனர்.
புகாரளிக்க திரண்டு வந்த ஜோதிடர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் மகேந்திரன் உறுதி அளித்த பின்னரே அவர்கள் அங்கிருந்து களைந்து சென்றுள்ளனர். ஒருவேளை மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், எதிர்நீச்சல் தொடருக்கு ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என்கிற கவலையில் சீரியல் குழுவினரும், ரசிகர்களும் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... அக்கா, தங்கச்சியை கல்யாணம் பண்ணிய நவரச நாயகன்... தாய் - தந்தையின் பிரிவு பற்றி மனம்திறந்த கவுதம் கார்த்திக்