கயல் சீரியலில் நடந்த செம்ம ட்விஸ்ட்! பிரச்சனைக்கு நடுவே ஆர்த்தி கழுத்தில் தாலி கட்டியது யார் தெரியுமா.?

Published : Aug 16, 2023, 03:30 PM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலின், இன்றைய எபிசோடில் எழில் - ஆர்த்தி திருமணத்தில் நடந்த மிகப்பெரிய ட்விஸ்ட் குறித்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
14
கயல் சீரியலில் நடந்த செம்ம ட்விஸ்ட்! பிரச்சனைக்கு நடுவே ஆர்த்தி கழுத்தில் தாலி கட்டியது யார் தெரியுமா.?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள்  பட்டாளமே உள்ளது. பரபரப்பான கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், கயல் என்கிற கதாபாத்திரத்தை மையப்படுத்தியே எடுக்கப்பட்டு வருகிறது. கயலும் இந்த ஒரு திருமணத்தின் மூலம் அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். பத்தாதற்கு கயலின் தம்பி போதை மருந்து பிரச்சனையிலும், ஆனந்தி எழியில் தம்பியை தள்ளிவிட அவர் ஆணி தலையில் குத்தி இறந்து விடுகிறார். இதை யாரிடமும் சொல்லாமல் மறைக்க, தற்போது கயலுக்கு மட்டுமே இந்த உண்மை தெரியவந்துள்ளது.

24

மற்றொருபுறம் எழில் கயலை உயிருக்கு உயிராக காதலித்து வரும் நிலையில், கயலுக்கும் - எழிலுக்கும் திருமணம் நடந்து விடும் என்கிற அச்சத்தில் எழிலின் அம்மாவும் கயலை கொலை செய்யும் அளவுக்கு இறங்கினார். ஆனால் அதில் இருந்து மீண்டு, தற்போது தன்னுடைய நண்பனின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ள, கயல் கழுத்தில் இன்று எழில் தாலி காட்டுவாரா? என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் பிரபல செய்தி வாசிப்பாளர்! யார் தெரியுமா?

34

அதே போல் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் இன்றைய தினம், எழில் - ஆர்த்தியின் திருமண எபிசோட் கிளைமேக்ஸை எட்டி உள்ளது. எழில் பக்காவாக பிளான் போட்டு, எக்சிகியூட் செய்துள்ளார். அதன்படி இன்று வெளியாகியுள்ள புரோமோவில், எழிலின் தந்தை, அனைவரது கவனத்தையும் திசை திருப்ப... கயலின் பெரியப்பா தர்மலிங்கத்திடம் பிரச்சனை செய்வது போல் நடிக்க, ஆர்த்தியும் சுயநினைவை இழந்த நிலையில் மணமேடையில் அமர்ந்துள்ளார். இதனை கச்சிதமாக பயன்படுத்தி கொண்டு, எழிலின் நண்பன் ஆனந்த் ஆர்த்தி கழுத்தில் தாலி கட்டுகிறார்.

44

திருமணம் நடந்து முடிந்த பின்பே மாப்பிள்ளை யார் என்பதை அறிந்து அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இந்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. எனினும், மாப்பிள்ளை திடீர் என மாறியதால், இதற்க்கு ஆர்த்தி, கயல் உட்பட அனைவரும் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பது இன்றைய தினமே தெரியவரும். ஆர்த்தி கழுத்தில் ஆனந்த் தாலி கட்டியது யாரும் எதிர்பாராத மிகப்பெரிய ட்விஸ்ட் என கூறலாம்.

சுதந்திர தின ஸ்பெஷலா.. லுங்கியை இழுத்து சொருகியது போன்ற கவர்ச்சி உடையில் அதகளம் பண்ணும் சமந்தா! ஹாட் கிளிக்ஸ்

Read more Photos on
click me!

Recommended Stories