அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கபடி போட்டியில் கத்திக்குத்து வாங்கிய சண்முகத்தை ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கபடி போட்டியில் கத்திக்குத்து வாங்கிய சண்முகத்தை ஹாஸ்பிடலில் அனுமதித்த நிலையில் இன்று நடந்தவற்றை பார்க்கலாம் வாங்க. சண்முகத்தின் இந்த நிலைமைக்கு சௌந்தரபாண்டியனின் சூழ்ச்சி தன் காரணம் என அறிந்த பரணி, சண்முகத்துக்கு ஆபரேஷன் செய்ய முடிவு எடுக்கிறாள்.
24
zee tamil anna serial
இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் பரணி சண்முகத்தின் தங்கைகளை துணைக்கு வைத்துக் கொண்டு ஆபரேஷனை நல்லபடியாக நடத்தி முடிக்க சண்முகம் மயக்கத்தில் இருக்கிறான். சண்முகத்துக்கு பரணி ஆப்ரேஷன் விஷயம் தெரிய வந்து சௌந்தரபாண்டி செம கடுப்பில் இருக்கிறார்.
இந்த நேரத்தில் பரணி ஊர்காரர்களையும் சண்முகத்தின் தங்கைகளையும் கூட்டிக்கொண்டு சௌந்தரபாண்டி வீட்டுக்கு வந்து சண்முகத்துக்கு மட்டும் ஏதாவது ஆச்சு சும்மா விடமாட்டேன் என வார்னிங் கொடுக்கிறாள். தங்கைகளும் தன்னுடைய அண்ணன் தங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை பேசி சௌந்தரபாண்டியை எச்சரித்து விட்டு செல்கின்றனர்.
44
Anna serial Today Episode
அதன் பிறகு சண்முகம் கண் திறக்க தங்கைகள் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்க நான் கபடி போட்டியில் ஜெயிச்சுட்டேன் கப்பு எங்க கப்பு வாங்க வேண்டாமா என்று சண்முகம் கேட்க பரணி இப்ப இது ரொம்ப அவசியமா என திட்டுகிறாள். ஆனால் சண்முகம் ஆமா நான் ஜெயிச்சுட்டேன் இல்ல அப்போ கப்பு வாங்கணும் என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.