சிம் இல்லை என்றால் வாட்ஸ்அப் வேலை செய்யாது.. புதிய விதி வரப்போகுது

Published : Mar 04, 2026, 05:41 PM IST

இந்தியாவில் இணைய மோசடிகளைத் தடுக்க, வாட்ஸ்அப் 'சிம் பைண்டிங்' என்ற புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய விதியின்படி, சிம் கார்டை மாற்றினால் அல்லது அகற்றினால் வாட்ஸ்அப் தற்காலிகமாக செயலிழக்கக்கூடும்.

PREV
15
வாட்ஸ்அப் சிம் பைண்டிங்

இந்தியாவில் இணைய மோசடிகளை கட்டுப்படுத்தவும், பயனர்களின் கணக்குகளை பாதுகாக்கவும் புதியது விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதன்படி, இன்ஸ்டான்ட் மெசேஜிங் பயன்பாடான வாட்ஸ்அப் தற்போது சிம் பைண்டிங் என்ற புதிய பாதுகாப்பு முறையை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய முறையின் படி, போனில் பயன்படுத்தப்படும் சிம் கார்டு கணக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். சிம் கார்டை அகற்றினால் அல்லது மாற்றினால், வாட்ஸ்அப் செயல்படாமல் இருக்கலாம்.

25
வாட்ஸ்அப் புதிய விதிகள்

இந்த தகவலை தொழில்நுட்ப தகவல்களை வெளியிடும் WABetaInfo வெளியிட்டுள்ளது. சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் புதிய வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, பல OTT மற்றும் தகவல் தொடர்பு பயன்பாடுகள் சிம் இணைப்பு முறையை பின்பற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

35
சிம் பைண்டிங் என்றால் என்ன?

சிம் பைண்டிங் என்பது ஒரு செயலியை அதன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட சிம் கார்டு மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற பாதுகாப்பு முறை. அதாவது, உங்கள் வாட்ஸ்அப் கணக்கு எந்த எண்ணில் பதிவு செய்யப்பட்டதோ, அதே சிம் கார்டு போனில் இருந்தால்தான் அந்த பயன்பாடு இயங்கும். சிம் மாற்றப்பட்டாலோ அல்லது அகற்றப்பட்டாலோ, தற்காலிகமாக செயலிழக்கலாம்.

45
வாட்ஸ்அப்பை இணைக்கும் சிம்

தற்போது வாட்ஸ்அப் பயன்படுத்தும் முறையில், பயனர்கள் ஒரு 6 இலக்க ஓடிபி சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிட்டு கணக்கை செயல்படுத்துகிறார்கள். அதன் பிறகு சிம் செயலியில் உள்ளதா என்பதை செயலி தொடர்ந்து சரிபார்ப்பதில்லை. ஆனால் சிம் பைண்டிங் அமல்படுத்தப்பட்டால், சிம் பயன்பாட்டிற்கான வாட்ஸ்அப் கணக்கு சரிபார்க்கப்படும்.

55
வாட்ஸ்அப் அப்டேட்

இந்த புதிய விதியை அமல்படுத்துவதன் முக்கிய நோக்கம், பயன்படுத்தப்படாமல் இருக்கும் அல்லது மீண்டும் விற்பனை செய்யப்பட்ட மொபைல் எண்களை தவறாக பயன்படுத்துகிறது பயன்படுத்துவதைத் தடுப்பதே என தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் இணைய மோசடிகள் மற்றும் போலி கணக்குகள் குறையலாம் என்று அரசு நம்புகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories