வாட்ஸ்அப் யூசர்களே உஷார்! இனி 'பேன்' ஆனா கதை முடிஞ்சுது.. மத்திய அரசு அதிரடி!

Published : Dec 25, 2025, 04:41 PM IST

WhatsApp வாட்ஸ்அப்பில் முடக்கப்பட்ட எண்கள் இனி மற்ற செயலிகளிலும் இயங்காது! சைபர் மோசடியைத் தடுக்க மத்திய அரசு புதிய அதிரடி திட்டம்.

PREV
15
WhatsApp சைபர் மோசடிக்கு எதிரான போர்

இந்தியாவில் அதிகரித்து வரும் சைபர் மோசடிகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மெட்டாவுக்கு (Meta) சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், ஒவ்வொரு மாதமும் சுமார் 1 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் கணக்குகளை முடக்கி வருகிறது. சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் மற்றும் மோசடி வேலைகளில் ஈடுபடும் எண்களைக் கண்டறிந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுதொடர்பான விபரங்கள் அதன் மாதாந்திர அறிக்கையிலும் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஆனால், இது மட்டும் போதுமானதாக இல்லை என்று கருதும் மத்திய அரசு, அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறது.

25
ஓட்டைகளை அடைக்க புதிய திட்டம்

வாட்ஸ்அப் தனது தளத்தில் மோசடி செய்பவர்களைத் தடுத்தாலும், அவர்கள் வேறு வழிகளில் தப்பித்து விடுகிறார்கள். தி எகனாமிக் டைம்ஸ் செய்தியின்படி, வாட்ஸ்அப்பில் முடக்கப்பட்ட எண்களைப் பற்றிய தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அந்நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் நோக்கம், ஒரு எண்ணை வாட்ஸ்அப் முடக்கினால், அந்த எண்ணைப் பயன்படுத்தும் நபர் டெலிகிராம் (Telegram) போன்ற பிற செயலிகளுக்கு மாறி மோசடியைத் தொடர்வதைத் தடுப்பதாகும். இதன் மூலம் மோசடி நபர்கள் டிஜிட்டல் உலகில் எங்குமே செயல்பட முடியாதவாறு ஒரு முழுமையான தடையை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

35
தகவல் பகிர்வில் உள்ள சிக்கல்கள்

தற்போதுள்ள நடைமுறைப்படி, வாட்ஸ்அப் எத்தனை கணக்குகளை முடக்கியது என்ற எண்ணிக்கையை மட்டுமே வெளியிடுகிறது. ஆனால், எதனால் அந்தக் குறிப்பிட்ட கணக்கு முடக்கப்பட்டது? அது தானாகவே முடக்கப்பட்டதா அல்லது புகாரின் அடிப்படையில் முடக்கப்பட்டதா? போன்ற தெளிவான காரணங்கள் அந்த அறிக்கையில் இருப்பதில்லை. மோசடி நபர்கள் வாட்ஸ்அப்பில் தடை செய்யப்பட்டதும், உடனடியாக வேறு செயலிகளுக்கு மாறி தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடுகிறார்கள். இந்த இடைவெளியை நிரப்பவே, வாட்ஸ்அப் மற்றும் பிற தளங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்தை அரசு வலியுறுத்துகிறது.

45
ஓடிபி (OTP) செயலிகள் மற்றும் சிம் கார்டு சவால்

மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை அதிகம் விரும்பக் காரணம், ஒருமுறை கணக்கை உருவாக்கிவிட்டால், சிம் கார்டு இல்லாமலேயே அந்த எண்ணை வைத்துக்கொண்டு செயலியைப் பயன்படுத்த முடியும் என்பதுதான். இதனால், குற்றவாளிகள் யார், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது காவல்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. ஒரு சிம் கார்டு எப்போது வாங்கப்பட்டது, அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்கள் உண்மையானதா என்பதைக் கண்டறிவது இந்த மோசடிகளைத் தடுக்க மிக அவசியமாகும்.

55
அரசின் அதிகாரம் மற்றும் வெளிப்படைத்தன்மை

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னாள் மூத்த அதிகாரி ராகேஷ் மகேஸ்வரி இதுகுறித்துக் கூறுகையில், "மாதாந்திர அறிக்கைகளை வெளியிடச் சொன்னதன் நோக்கமே வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கத்தான். ஒருவேளை சில விவகாரங்களில் ஆழமான விசாரணை தேவைப்பட்டால், கூடுதல் தகவல்களைக் கோரும் அதிகாரம் அரசுக்கு உள்ளது," என்று தெரிவித்துள்ளார். ஆக மொத்தம், இனி ஆன்லைனில் மோசடி செய்தால் தப்பிப்பது கடினம் என்ற நிலையை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories