சைபர் குற்றங்கள் அதிகரிப்பு:
இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம், அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் தான். நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத எண்கள், தொழில்நுட்ப கோளாறுகளை ஏற்படுத்தி, மோசடிகளுக்கு வழிவகுக்கலாம் என NPCI எச்சரித்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பயன்படுத்தப்படாத எண்களை மீண்டும் மற்றவர்களுக்கு வழங்கும் போது, மோசடி செய்பவர்கள் அவற்றை பயன்படுத்தி வங்கி கணக்குகளில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது.