இந்த நிலையில், பிஎஸ்என்எல் பயனர்கள் மட்டும் தற்போதைக்கு சற்றே நிம்மதியாக இருக்கலாம். ஏனெனில், பிஎஸ்என்எல் தனது ரீசார்ஜ் திட்டங்களில் இப்போது வரை பெரிய அளவிலான விலை உயர்வை அறிவிக்கவில்லை. சில திட்டங்களில் வேலிடிட்டி குறைக்கப்பட்டிருந்தாலும், அடிப்படை ரீசார்ஜ் விலை மாற்றமின்றி தொடர்வதால், குறைந்த செலவில் சேவையைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது ஒரு ஆறுதலாக உள்ளது. தகவல்களின் படி, ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய நிறுவனங்கள் 10 முதல் 12 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.