ஐ.எம்.சி எனப்படும் இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறும். இந்திய தொலைத்தொடர்பு துறையும், செல்லுலார் ஆபரேட்டர் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வு தான், ஆசியாவிலேயே பிரம்மாண்டமான தொழில்நுட்ப கருத்தரங்கம் ஆகும். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான இந்தியன் மொபைல் காங்கிரஸ் நிகழ்வு வரும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு, அக்டோபர் 4 ஆம் தேதி முடிவடைகிறது.