வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக இந்திய டெக் நிறுவனமான ஜோஹோ கொண்டு வந்த 'அரட்டை' செயலியின் புகழ் மங்கி வருகிறது. கூகுள் ப்ளே ஸ்டோரில் டாப் 100 செயலிகள் பட்டியலில் இருந்து இது வெளியேறியுள்ளது. 2021-ல் தொடங்கப்பட்ட இந்த செயலி, 'ஆத்மநிர்பர் பாரத்' பிரச்சாரத்தால் பிரபலமடைந்தது. கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு கோடி பதிவிறக்கங்களைக் கடந்து, 4.8 ரேட்டிங்குடன் முதலிடத்தைப் பிடித்தது.