'Fawning' மனநிலையில் இருப்பவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளையும், உணர்வுகளையும் விட, மற்றவர்களின் தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால், அவர்களது சுயமரியாதை பாதிக்கப்படும். இந்த மனநிலை, ஒரு நபர் தொடர்ந்து மனரீதியான உறவு சிக்கல்களைச் சந்திக்கும்போது, தன்னைத் தற்காத்துக்கொள்ளும் ஒரு வழியாக உள்ளது. மற்றவர்களின் கோபத்தையோ அல்லது வெறுப்பையோ தவிர்ப்பதற்காக, தன்னுடைய தேவைகளை அடக்கி, மற்றவர்களுக்கு ஏற்ப நடந்துகொள்வார்கள்.
குழந்தைப் பருவத்தில் உணர்ச்சிபூர்வமாக நிலையற்ற சூழல்களில் வளர்ந்தவர்களுக்கு, இந்த மனநிலை உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. இத்தகைய நபர்கள், மற்றவர்களின் மனநிலை, மற்றும் எதிர்வினைகளைக் கூர்ந்து கவனித்து, அதற்கேற்றவாறு தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்வார்கள். இதன் மூலம், பிறருடன் ஏற்படக்கூடிய மோதல்களையோ அல்லது புறக்கணிப்பையோ தவிர்க்க முயல்வார்கள். நீண்ட காலத்திற்கு இது தொடரும்போது, அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.