தகவல் தொழில்நுட்ப துறையில் ஜியோ நிறுவனம் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். ஜியோ நிறுவனம் வருவதற்கு முன்பு அழைப்பு, டேட்டா என அனைத்திற்கும் நாம் அதிக தொகையை செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் இந்த நிலையை மாற்றியது ஜியோ நிறுவனம் தான். குறைந்த செலவில் பல சேவைகளை வழங்கியதால் குறுகிய காலத்திலேயே ஜியோவில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இணைந்தனர்.
ஆனால் ஓரிரு இடங்களில் ஜியோவின் நெட்வொர்க் கவரேஜ் முறையாக கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்தன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் ஜியோ சிம் வாங்கிய பயன்படுத்தியவர்கள் போதிய சிக்னல் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.