பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பம்பர் சலுகையை அறிவித்துள்ளது. இது மாணவர்களுக்கு ஏற்ற திட்டமாக உள்ளது. மாணவர்கள் குழந்தைகள் தின சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தில் வெறும் ரூ.8-9 செலவில் அதிவேக இணையம், வரம்பற்ற அழைப்புகளைப் பெறலாம்.
மாணவர் ஸ்பெஷல்
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், 'மாணவர் ஸ்பெஷல்' என்ற ரூ.251 திட்டத்தை அறிவித்துள்ளது. 'படியுங்கள், விளையாடுங்கள், பிஎஸ்என்எல் உடன் இணைந்திருங்கள்' என ட்விட்டரில் கூறியுள்ளது. இந்தத் திட்டம் ஒரு மாதத்திற்கு மட்டுமே கிடைக்கும். இந்த பிஎஸ்என்எல் திட்டம் பற்றி முழுமையாக பார்க்கலாம்.