"பிஎஸ்என்எல் சுதேசி இணைப்புடன் உங்கள் வாழ்க்கையைப் பிரகாசமாக்குங்கள்" என்ற முழக்கத்துடன் இந்த சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசின் தொலைத்தொடர்பு சேவைகளையும், மலிவான திட்டங்களையும் விரும்புவோரை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வலுவான நம்பிக்கையைப் பெற்றுள்ள பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல், விஐ போன்ற தனியார் நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களைக் கவரும் நடவடிக்கையாக இந்த ரூ. 1 திட்டத்தைக் கருதுகிறது.