Bharat Taxi மத்திய அரசின் ஆதரவுடன் 'பாரத் டாக்ஸி' அறிமுகம்! ஓட்டுநர்களுக்கு கமிஷன் இல்லை, பயணிகளுக்கு கூடுதல் கட்டணம் இல்லை. இதன் 5 முக்கிய சிறப்பம்சங்கள் இதோ.
தனியார் டாக்ஸி செயலிகளின் ஆதிக்கத்திற்கு மத்தியில், மத்திய அரசின் ஆதரவுடன் 'பாரத் டாக்ஸி' (Bharat Taxi) என்ற புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புது தில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா இதனைத் தொடங்கி வைத்தார். இது வெறும் லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், ஒரு கூட்டுறவு மாதிரியில் (Cooperative Model) செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் என இரு தரப்பினரும் பயனடைவார்கள்.
25
ஓட்டுநர்களுக்கு முழு லாபம் - 'சாரதிகள்'
இதில் வாகனம் ஓட்டுபவர்கள் 'சாரதிகள்' என்று அழைக்கப்படுவார்கள். மற்ற செயலிகளைப் போல ஒவ்வொரு சவாரிக்கும் கணிசமான தொகையை கமிஷனாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு சுமார் 30 ரூபாய் மட்டுமே அணுகல் கட்டணமாக (Access Fee) செலுத்த வேண்டும். மீதமுள்ள முழு வருமானமும் ஓட்டுநர்களுக்கே சேரும். இது ஓட்டுநர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
35
பயணிகளுக்கு நிம்மதி: 'சர்ஜ் கட்டணம்' ரத்து
மக்கள் அதிகம் கூடும் நேரங்களில் (Peak Hours) தனியார் செயலிகள் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதை (Surge Pricing) நாம் பார்த்திருப்போம். ஆனால், பாரத் டாக்ஸியில் இந்த 'சர்ஜ் கட்டணம்' கிடையாது. எந்த நேரமாக இருந்தாலும், எவ்வளவு கூட்ட நெரிசல் இருந்தாலும் கட்டணம் நிலையாகவே இருக்கும். இது தினசரி அலுவலகம் செல்பவர்களுக்கும், அவசரத் தேவைகளுக்கும் பெரும் நிம்மதியை அளிக்கும்.
விமான நிலையங்களுக்கான பயணங்களில் கடைசி நேரத்தில் ஏற்படும் கட்டண உயர்வால் பயணிகள் அவதிப்படுவதைத் தவிர்க்க, இந்திய விமான நிலைய ஆணையத்துடன் (AAI) பாரத் டாக்ஸி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் விமான நிலையங்களுக்குச் செல்லவும், அங்கிருந்து வரவும் நிலையான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணக் கட்டணத்தை எளிதாகச் செலுத்த பேடிஎம் (Paytm) நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதன் மூலம் யுபிஐ (UPI) மூலமாகவே எளிதாகப் பணம் செலுத்தலாம்.
55
பாதுகாப்பான பயணம்: போலீஸ் உதவி மற்றும் ஹெல்ப்லைன்
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பாரத் டாக்ஸி தனி கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக டெல்லி காவல்துறையுடன் இணைந்து 35 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் புகார்கள் இருந்தால் பயணிகள் உடனடியாகத் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஓட்டுநர்களின் பின்னணி முழுமையாகச் சரிபார்க்கப்பட்ட பின்னரே பணியில் சேர்க்கப்படுகிறார்கள். ஏசி, நான்-ஏசி, ஆட்டோ மற்றும் பைக் டாக்ஸி என அனைத்து வசதிகளும் இதில் உள்ளன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.