Airtel ஏர்டெல் மற்றும் கூகுள் இணைந்து RCS சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளன. இனி சாதாரண எஸ்எம்எஸ் மூலமே போட்டோ, வீடியோ அனுப்பலாம். முழு விவரம் உள்ளே.
Airtel "சாதாரண மெசேஜ்ல இவ்வளவு வசதிகளா?" - வாட்ஸ்அப்புக்கு போட்டியாக ஏர்டெல் களமிறக்கிய புது ஆயுதம்!
இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் எல்லோருமே இன்று வாட்ஸ்அப் இல்லாமல் இருப்பதில்லை. போட்டோ, வீடியோ அனுப்பவும், சாட் செய்யவும் வாட்ஸ்அப் தான் முதல் சாய்ஸ். ஆனால், இந்த பழக்கத்தை மாற்றும் வகையில் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் (Airtel), தொழில்நுட்ப ஜாம்பவான் கூகுளுடன் (Google) ஒரு மெகா கூட்டணியை அமைத்துள்ளது. இதன் மூலம் உங்கள் போனில் உள்ள சாதாரண மெசேஜ் ஆப், இனி ஸ்மார்ட்டாக மாறப்போகிறது.
26
வாட்ஸ்அப் பாணியில் எஸ்எம்எஸ் (RCS)
'ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ்' (Rich Communication Services - RCS) என்ற புதிய தொழில்நுட்பத்தை ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இதுவரை நாம் அனுப்பும் சாதாரண எஸ்எம்எஸ்ஸில் எழுத்துக்களை மட்டுமே அனுப்ப முடியும். ஆனால், இந்த RCS வசதி மூலம் வாட்ஸ்அப்பில் செய்வது போலவே உயர்தரமான (High Resolution) புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ ஃபைல்களை அனுப்ப முடியும். அதுமட்டுமின்றி, 'குரூப் சாட்' (Group Chat) வசதியும் இதில் உண்டு.
36
புளூ டிக் மற்றும் டைப்பிங் வசதி
வாட்ஸ்அப்பில் உள்ளது போலவே, நீங்கள் அனுப்பும் மெசேஜை எதிர்முனையில் இருப்பவர் படித்துவிட்டாரா என்பதை அறிய 'ரீட் ரெசிப்ட்' (Read Receipts) வசதி இதில் கிடைக்கும். அதேபோல, எதிர்முனையில் இருப்பவர் டைப் செய்வதைக் காட்டும் 'லைவ் டைப்பிங்' (Live Typing Indicators) வசதியும் உண்டு. இவை அனைத்தும் உங்கள் போனில் ஏற்கனவே உள்ள 'Messages' ஆப் மூலமாகவே நடக்கும் என்பதுதான் இதன் சிறப்பு. இதற்குத் தனியாக ஆப் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை.
இந்தச் சேவைக்குக் கட்டணம் உண்டா? என்ற கேள்வி பலருக்கும் எழும். தகவல்களின்படி, ஒரு RCS மெசேஜுக்கு 11 பைசா (Re 0.11) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் கிடைக்கும் வருவாயில் 80 சதவீதம் ஏர்டெல்லுக்கும், 20 சதவீதம் கூகுளுக்கும் செல்லும். மேலும், வாட்ஸ்அப் போலவே இதிலும் 'எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்' (End-to-end encryption) வசதி உள்ளதால், உங்கள் உரையாடல்கள் பாதுகாப்பாக இருக்கும்.
56
ஜியோ, வோடபோனுக்குப் பிறகு ஏர்டெல்
ஏற்கனவே ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகிய நிறுவனங்கள் RCS சேவையை வழங்கி வருகின்றன. இப்போது ஏர்டெல்லும் கூகுளுடன் இணைந்துள்ளதால், இந்தியாவின் மூன்று பெரிய நிறுவனங்களும் இந்த நவீன தொழில்நுட்பத்திற்கு மாறிவிட்டன.
66
எதிர்காலம் எப்படி இருக்கும்?
தற்போது ஒவ்வொரு நெட்வொர்க்கும் தனித்தனியாகச் செயல்பட்டாலும், எதிர்காலத்தில் ஏர்டெல், ஜியோ, வி என எந்த நெட்வொர்க்கில் இருந்தாலும் தங்களுக்குள் RCS மெசேஜ்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதி வரும். இது முழுமையாக அமலுக்கு வரும்போது, மூன்றாவது நபர்களின் செயலிகளை (Third-party apps) நம்பி இருக்க வேண்டிய அவசியம் குறையும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கணிக்கின்றனர்.