இந்தியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை சில நகரங்களில் கொண்டு வந்தது. ஏர்டெலுடன் ஒப்பிடுகையில் ஜியோ நிறுவனம் சில நாட்கள் தாமதமாக 5ஜியை கொண்டு வந்தாலும், அடுத்தடுத்த நாட்களில் பல மாநிலங்கள், பல நகரங்களில் 5ஜியை விரிவுபடுத்தியது.
ஏர்டெலைப் பொறுத்தவரையில் 5ஜி இன்டர்நெட்டுக்கான டேட்டா பேக் குறித்து முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை. 4ஜி கட்டணத்தில், 4ஜிக்கு எவ்வளவு ஜிபி டேட்டா வழங்கப்படுகிறதோ, அதையே 5ஜி வேகத்தில் பயனர்கள் பெறுகின்றனர். அதாவது, ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா பெறும் பயனர்கள், அதே 2ஜிபி டேட்டாவை தான் 5ஜி வேகத்தில் உபயோகிக்கின்றனர். இதனால் பல பயனர்கள் 5ஜி மாற்றும் போது, 2ஜிபி டேட்டாவை சட்டென்று காலியாகிவிடுவதாக கவலை தெரிவித்தனர்.
https://twitter.com/bhajanpreet86/status/1633738085061066752?s=20