பிஎஸ்என்எல் 4G நெட்வொர்க்:
5G சேவைகளை அறிமுகப்படுத்துவது BSNL நிறுவனம் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் இயங்க வைப்பதற்கான முக்கிய உத்தி ஆகும். பிஎஸ்என்எல் இப்போது 4G நெட்வொர்க்கையும் விரிவுபடுத்தி வருகிறது. இதற்கு சமீபத்தில் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட ரூ.6,000 கோடி உதவியாக உள்ளது. இந்த வகையில் பல ஆண்டுகளாக பிஎஸ்என்எல் கிட்டத்தட்ட ரூ.3.22 லட்சம் கோடி நிதி உதவியைப் பெற்றுள்ளது.