சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடந்த மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி திட்ட நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறோம். இந்த வரிசையில்தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி என்ற திட்டத்தை கொண்டுவந்தோம்.