புத்தாண்டு வரை மழை இருக்கா? இல்லையா? சென்னை வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்!

Published : Dec 26, 2024, 03:43 PM ISTUpdated : Dec 26, 2024, 03:48 PM IST

Tamilnadu Weather Update: வடகிழக்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், டிசம்பர் 31 மற்றும் புத்தாண்டு தினத்தன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

PREV
15
புத்தாண்டு வரை மழை இருக்கா? இல்லையா? சென்னை வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்!
Northeast Monsoon

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால், அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் புத்தாண்டு அன்று கனமழை இருக்குமா என்பது குறித்து வானிலை மையம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது. 

25
Tamilnadu Rain

அதில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 5.30 மணி அளவில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, காலை 8.30 மணி அளவில் மேலும் வலுவிழந்தது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை!

35
Tamilnadu Weather Update

இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் 28 முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 

இதையும் படிங்க: அமமுக முக்கிய பிரமுகர் விஜய் கட்சியில் இணைந்தார்! அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்!

45
Rain News

குறிப்பாக இந்த வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31-ம் தேதியும், 2025ம் ஆண்டு புத்தாண்டு தினத்திலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

55
Chennai Rain

குறிப்பாக இந்த வருடத்தின் கடைசி நாளான டிசம்பர் 31-ம் தேதியும், 2025ம் ஆண்டு புத்தாண்டு தினத்திலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories