அதாவது பொங்கல் தொகுப்புக்காக தமிழ்நாடு அரசு ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ஒன்றிய அரசிடம் ரூ.37,000 கோடி கேட்கப்பட்டது. ஆனால், ரூ.276 கோடி மட்டுமே வழங்கியது. SSA திட்டத்தில் ரூ.2100 கோடியை ஒன்றிய அரசு இன்னும் விடுக்கவில்லை. இதனால், அந்த செலவுகள் மாநில அரசியின் நிதியில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 வழங்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.