ஏன் இந்த மாற்றங்கள். போன ஜென்மத்தில் நீங்கள் என்ன செய்தீர்களோ அதை பொறுத்து இந்த பிறவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிறவியிலும் நீங்கள் என்ன செய்தீர்களோ என பேசிக்கொண்டிருக்கும் போதா அப்பள்ளி ஆசிரியர் ஒருவர் இந்த பேச்சிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறார்.
மறுபிறவி பற்றி பேசுகிறீர்கள், கர்மா பற்றி பேசுகிறீர்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதற்கு மஹா விஷ்ணு, நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன.? நீங்கள் ஒரு கேள்வி கேட்டால் நாங்கள் ஒரு கேள்வி கேட்போம். உங்கள் பெயர் என்ன.? உங்களுக்கு பதில் வேண்டும் என்றால் நான் கேட்கும் கேள்விக்கு பதில் அளியுங்கள் என ஒரு வித தோரணையாக எதிர்த்து பேசுகிறார். .