தெற்கு உள் கர்நாடகா முதல் தெலங்கானா வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாத நிலையில் முன் எப்போதும் இல்லாத வகையில் பிப்ரவரி மாதத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலால் நொந்து நூலாகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வீட்டில் ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை. மழை எப்போது பெய்யும்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர்.
25
எந்தெந்த மாவட்டங்களில் 100 டிகிரி வெயில்
நேற்று ஈரோடு, கரூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் நேற்று 101 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அதேபோல் திருத்தணி, மதுரை, சென்னை பகுதிகளில் 100 டிகிரி வெயில் பதிவானது. பிற பகுதிகளில் இயல்லை ஒட்டியும் ஒரு சில இடங்களில் 98 டிகிரியாகவும் இருந்தது. வெப்பநிலையை பொருத்தவரையில் திருநெல்வேலி, கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே மழை குறித்து முக்கிய தகவல் ஒன்றை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
35
இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்
அதாவது தெற்கு உள் கர்நாடகா முதல் தெலங்கானா வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் மார்ச் 8ம் தேதி தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
மேலும் மார்ச் 9ம் தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
55
சென்னை நிலவரம்?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.