School Teacher: ஆங்கில ஆசிரியர்களுக்கு வாட்ஸ்அப் குழு! எதற்காக தெரியுமா? வெளியான தகவல்!

Published : Oct 19, 2024, 08:12 PM IST

School Teacher: தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் ஆங்கிலக் கற்பித்தல் திறனை மேம்படுத்த, புதிய வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மூலம் ஆசிரியர்கள் கற்பித்தல் சார்ந்த விவரங்களைப் பகிர்ந்துகொள்வர். ஆர்வமில்லாத ஆசிரியர்கள் மீண்டும் பயிற்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

PREV
14
School Teacher: ஆங்கில ஆசிரியர்களுக்கு வாட்ஸ்அப் குழு! எதற்காக தெரியுமா? வெளியான தகவல்!

தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி,  நடுநிலைப்பள்ளி,  உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக அரசு அவ்வப்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஆசிரியர்கள் வருகை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறையை அறிமுகத்தியது. பின்னர் மதிய உணவுக்காக ஆசிரியர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தது. 

24

இந்நிலையில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுவதற்கான புதிய முயற்சியை எடுத்துள்ளது. அதில் பள்ளிக் கல்வித்துறை செயலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களை இடைநிலை, பட்டதாரி என வகைப்படுத்தி அவர்களை, 2 கட்செவி அஞ்சல் (whatsapp) குழுவில் இணைத்து அவர்களுக்கு கற்பித்தல் பணிக்கு உதவ மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: School Holiday: தீபாவளிக்கு 4 இல்ல 5 நாட்கள் விடுமுறை! அரசின் அறிவிப்பால் குஷியில் பள்ளி மாணவர்கள்!

34

இதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் தங்கள் நிறுவனத்திலுள்ள 2 முதுநிலை விரிவுரையாளர் விரிவுரையாளர்களை நியமித்து 2 வாட்ஸ் ஆப் குழுக்கள் உருவாக்கச் செய்ய வேண்டும். இக்குழுவில் ஆசிரியர்களை இணைத்த பிறகு அக்குழுவிலுள்ள ஆசிரியர்களோ அல்லது நிறுவன பொருப்பாளரோ சிறு செயல்பாடுகள், பணித்தாள்கள் மற்றும் பாடக்கற்பித்தல் சார்ந்த விவரங்களையோ குழுவில் பதிவிட வேண்டும். 

இதையும் படிங்க:  TASMAC Shop: டோட்டலாக மாறப்போகும் டாஸ்மாக் கடை! என்னென்ன வசதிகள் வரப்போகுது தெரியுமா? குஷியில் குடிமகன்கள்!

44

இச்செயல் வழியாக ஆங்கில ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை பணித்திறன் மேம்படுவதற்கான தொடர் முயற்சியாகும். இச்செயல்பாடுகளில் ஆர்வமில்லாத ஆசிரியர்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் தொடர்ந்து ஆர்வம் காட்டாத ஆசிரியர்களை தேர்வு செய்து மீளவும் பயிற்சியில் பங்கு பெறச் செய்யும் வகையில் ஒரு பட்டியல் தயாரித்து இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories