காவல்துறை அதிகாரிகள் புகார்
இந்த நிலையில் தான் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை கமிஷனர் உள்ளிட்ட முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்தார். இதனையடுத்து தான் தற்போது உள்துறை செயலாளர் அமுதாவை மாற்றம் செய்த்தாக கூறப்படுகிறது.
மேலும் அமுதா ஐஏஎஸ்க்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து இல்லையென்றும் கூறப்படுகிறது. இதனால் அமுதா ஐஏஎஸ் மீது அதிகாரிகள் புகார் தெரிவித்ததாகவும் ஒரு தகவலும் போலீசார் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கிராமங்கள் மீது பார்வையைத் திருப்பும் முதல்வர் மு.க. ஸ்டாலின்... அமுதா ஐ.ஏ.எஸ்ஸை களமிறக்கிய பின்னணி.!