சென்னை ஏரிகளில் 46% மட்டுமே நீர் இருப்பு
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 301 மில்லியன் கனஅடியாக உள்ளது. அந்த வகையில் சதவிகித அடிப்படையில் செம்பரம்பாக்கத்தில் - 61.48%, புழல் ஏரியில் - 71.36%, பூண்டி - 15.81%, சோழவரம் - 10.82%, கண்ணன்கோட்டை - 60.2%, ஒட்டுமொத்தமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 46.99 சதவிகித நீர் இருப்பு மட்டுமே உள்ளது. இந்த நீர் மூலம் மார்ச் மாதம் வரை மட்டுமே குடிநீருக்காக நீர் வழங்க கூடிய சூழல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.