குறைய தொடங்கிய தக்காளி விலை
இதனையடுத்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி கிடைக்க நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. வெளி சந்தையில் 180 முதல் 200 வரை விற்ற நேரத்தில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஓரளவு விலை கட்டுப்படுத்தப்பட்டது.
இருந்த போதும் பெரும்பாலான மக்கள் வெளி சந்தையில் தக்காளி வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கோயம்பேடு மார்க்கெட்டை பொறுத்தவரை ஒரு நாளுக்கு 1000 முதல் 1100 டன் தக்காளி வரத்து வந்தது. ஆனால் கடந்த மாதம் 300 முதல் 450 டன் வரை மட்டுமே தக்காளி வந்தது. இதனால் விலை அதிகரித்ததாக கூறப்பட்டது.