ஊட்டி, கொடைக்கானலில் அலைமோதும் கூட்டம்
அங்கு இயற்கையான அழகிய மரங்களை ரசித்தும், வாகன இரைச்சலில் இருந்து தப்பித்தும், தலையை தொட்டு செல்லும் மேக கூட்டங்களின் அழகில் மயங்கவும் செய்கின்றனர். அதே நேரம் நாளுக்கு நாள் மக்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஈ பாஸ் நடைமுறை அமல் படுத்தப்பட்டுள்ளது. எனவே ஒரு நாளைக்கு 6 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே ஊருக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதால் சுற்றுலா வந்த பயணிகள் திரும்பி செல்லும் நிலை உள்ளது.
மேலும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா பகுதிகளை பார்வையிட்ட மக்கள் அடுத்து செல்ல விரும்புவது நீர் நிலைகள் சார்ந்த இடங்கள், இதில் முதல் இடத்தில் இருப்பது தென்காசி, திருநெல்வேலி மாவட்டம், இந்த மாவட்டத்தை சுற்று பல்வேறு அழகிய இடங்கள் உள்ளது.