விடுமுறை என்றாலே மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை கொண்டாடுவார்கள். அந்த வகையில் அக்டோபர் மாதம் கொத்து கொத்தாக விடுமுறையை அள்ளிக்கொடுத்தது. காலாண்டு விடுமுறை, காந்தி ஜெயந்தி, ஆயூத பூஜை விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை கிடைத்தது.
இதனை தொடர்ந்து தீபாவளிக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என மாணவர்கள் மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களுக்கும் குஷியான மாதமாக அக்டோபர் மாதம் அமைந்தது. அதிலும் மழை பாதிப்பால் கூடுதல் விடுமுறையும் கிடைத்தது.