சென்னையில் கொட்டித் தீர்த்த மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், இரவு நேரத்தில் மழையானது வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் நேற்று இரவு 8 மணிக்கு சென்னையில் பெய்ய தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. இதனால் சலையில் தண்ணீரானது தேங்கியது. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.