இது குறித்து நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- நான் நாம் தமிழர் கட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை கட்சி பணிகளை சிறப்பாக செய்தேன். 2 நாடாளுமன்ற தேர்தல், 1 சட்டமன்ற தேர்தல், ஒரு உள்ளாட்சி தேர்தல் ஆகிய தேர்தல்களிலும் சிறப்பாக பணியாற்றினேன். இதுநாள் வரை நான் செய்த செயல்கள், உடல் உழைப்பு, பண விரயம் இவை அனைத்தையும் சீமான் பொருட்படுத்தும்படி இல்லை. மேலும் கடைசியாக நடந்த நிகழ்வில்கூட அவர், சொன்ன வார்த்தைகள் எனக்கு மனவேதனையை அளித்தது. எனவே நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகுகிறேன். இதை நான் மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.